கலிபோர்னியாவில் ஸ்ரீ ருக்மணி பாண்டுரங்கா, ஷீரடி சாய் பாபா கோவில் மகா கும்பாபிஷேகம்
கலிபோர்னியா: அமெரிக்காவின் சான் ஜோஸில் உள்ள பாலாஜி கோவில் சார்பில் ஸ்ரீ ருக்மணி பாண்டுரங்கா மற்றும் ஸ்ரீ ஷீரடி சாய் பாபா ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
பாலாஜி கோவிலின் நிறுவனரும், தலைவருமான சுவாமி ஆனந்தநாதாஜி மற்றும் கலிபோர்னியாவில் பிரபலமாக உள்ள புரோகிதர்கள் வேத, ஆகம விதிகளின்படி கும்பாபிஷேகத்தை நடத்தவிருக்கின்றனர். ஸ்ரீ கணபதி பூஜை, புன்ய வாச்சனம், சுத்தி மற்றும் மஹா ஹோமம் உள்ளிட்டவை நடத்தப்படும்.
மகா கும்பாபிஷேகம் நடக்கும் 5 நாட்களும் சாமி சிலைகளுக்கு தானியங்கள், நீர், பால், பூ ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 2ம் தேதி சுவாமிஜி கலாபிஷேகம் செய்யவிருக்கிறார். அமெரிக்காவில் சுவாமிஜி 20 ஆண்டுகள் சேவை செய்ததன் நினைவு கொண்டாட்டம் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகள் நடைபெறும்.
ஜூன் 1ம் தேதி விஜய் சவ்வா மற்றும் உமா ஆகியோர் தலைமையிலான தெலுங்கான கலாச்சார அமைப்பு மற்றும் அதன் குழு உள்ளூர் இந்திய அமைப்புகளுடன் சேர்ந்து ஹோமம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ஜூன் 2ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெறும்.
அன்று மதியம் 2 மணிக்கு ஸ்ரீனிவாசா கல்யாணம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 108 சத்ய நாராயண பூஜையும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து மேலும் விவரம் அறிய www.BalajiTemple.net என்ற இணையதளத்திற்கு செல்லவும்.











Click it and Unblock the Notifications