உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்யுங்கள்: அபுதாபி இளவரசரிடம் ப.சிதம்பரம் வலியுறுத்தல்

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று துபாய் சென்றார். அவர் அங்கு அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். எமிரேட்ஸ் அரண்மனைக்கு சென்ற சிதம்பரத்திற்கு இளவரசர் சிறப்பான வரவேற்பு அளித்தார். அவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும் என்று சிதம்பரம் உறுதி அளித்தார். மேலும் இந்தியாவில் உள்கட்டமைப்புத் துறையில் ஐக்கிய அரபு அமீரகம் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் இளவரசரிடம் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் உடனிருந்தார். சிதம்பரம் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications