அந்த 'சாத்தான்' முஷாரப்பை கொல்லாம விடமாட்டோம்: தாலிபான்கள் மிரட்டல்

இது குறித்து ஜிஹாதி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பாகிஸ்தான் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் இஹ்சானுல்லா இஹ்சான் கூறியிருப்பதாவது,
அந்த சாத்தான் முஷாரப்புக்கு அவர் செய்த தீய செயல்களுக்காக விரைவில் மரண தண்டனை அளிப்போம். பலுசிஸ்தான் முதல் வசிரிஸ்தான் வரை முஷாரப் இந்த நாட்டை ரத்தம் மற்றும் தீயால் சூழ வைத்தார். லால் மஸ்ஜிதில் நூற்றுக்கணக்கான அப்பாவி மாணவர்களைக் கொன்றது அவர் தான் என்று தெரிவித்துள்ளார்.
முஷாரப்புக்கு கொலை மிரட்டல் விடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக் இ தாலிபான் ஏற்கனவே ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பொது தேர்தலில் போட்டியிட நாடு திரும்பிய முஷாரப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, 2007ம் ஆண்டில் நீதிபதிகளை கைது செய்த வழக்கு மற்றும் பலோச் தேசியவாத தலைவர் அக்பர் புக்ட்டியை ராணுவ நடவடிக்கை மூலம் கொன்றது ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
முஷாரப் மார்ச் மாதம் பாகிஸ்தான் திரும்பும் முன்பே அவரை கொலை செய்ய தற்கொலைப்படை ஆட்கள் மற்றும் ஸ்னைப்பர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக பாகிஸ்தான் தாலிபான்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications