மூளையில் ஆபரேஷன்: ‘ஜாலியா கிடார் வாசிச்ச நோயாளி’
வாஷிங்டன்: உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒரு நோயாளி தனக்கு மூளையில் ஆபரேஷன் நடந்த போது, மயக்கமடையாமால், தன்னுடைய கிதார் இசைக்கருவியை மீட்டிக் கொண்டிருந்தாராம்.
டாக்டர்கள் தீவிரமாக ஆபரேஷன் செய்து கொண்டிருந்த போது, பிராட் கார்டர் என்ற 39 வயது நோயாளி சுவாரஸ்யமாக தன்னுடைய கிடார் இசைக்கருவியை ரசித்து இசைத்துக் கொண்டிருந்த காட்சியை தற்போது உலக மக்கள் இணையம் மூலம் கண்டு ஆச்சர்யம் தெரிவிக்கின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த பிராட் ஒரு கிடார் இசை கலைஞர் . சில ஆண்டுக்கு முன்பு இவருக்கு கையில் நடுக்கம் ஏற்பட்டு பிறகு பக்கவாத பாதிப்பும் உருவானது. இதனால் அவருடைய மூளைப்பகுதியில் ‘பேஸ் மேக்கர்' பொருத்த டாக்டர்கள் ஆபரேஷன் நடத்தினார்கள்.
ஆபரேஷனின் போது,பிராட் கிடார் வாசிக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அது ‘டிவிட்டர்' இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பல்லாயிரக்கணக்கோர் கண்டு ரசித்தனர்.
இது மருத்துவ உலகில் முன்பேதும் நடந்திராத புதிய சாதனைகளில் ஒன்று என மருத்துவர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications