எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த எட்மண்ட் மறைவு: அதிமுகவினர் அஞ்சலி
மதுரை: எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பணியாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் எட்மண்ட் மதுரையில் காலமானார்
தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது உணவு மற்றும் சட்ட அமைச்சராக இருந்தவர் எட்மண்ட். அவர், கடந்த 1977ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை மூன்று முறை ஆறுமுகனேரி சட்டசபை தொகுதிக்கு எம்.எல்.ஏ. வாக தேர்வு செய்யப்பட்டவர். மேலும், டெல்லியில் தமிழக பிரதிநிதியாகவும் பணியாற்றியவர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்பு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் எட்மண்டுக்கு திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகனேரிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறுகின்றது. அவரது உடலுக்கு அதிமுக நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications