என் மகன் அப்பாவி, பணத்துக்கு ஆசைப்படாதவன்: ஸ்ரீசாந்த் தாய் கண்ணீர்
திருவனந்தபுரம்: தனது மகன் பணத்துக்கு ஆசைப்படாதவர் என்று ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் தாய் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சவான் மட்டும் திருமணத்திற்காக ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வரும் ஸ்ரீசாந்தின் பெற்றோர் சாந்த குமாரன் நாயர் மற்றும் தாய் சாவித்ரி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் தங்கள் மகன் நிரபராதி என்று தெரிவித்தனர்.

ஸ்ரீசாந்த்தின் தாய் சாவித்ரி கூறுகையில்,
ஸ்ரீசாந்த் கிரிக்கெட்டை உயிர் மூச்சாக நினைத்தார். அவர் விளையாடுகையில் மைதானத்தில் குறும்பு செய்வாரே தவிர மோசமான செயல்களில் ஈடுபட்டதில்லை. அவரது கைதுக்கு பின்னால் சதிச் செயல் உள்ளது. அவர் பணத்திற்கு ஆசைப்படாதவர். ஒரு வழக்குக்காகக் கூட அவர் காவல் நிலையம் சென்றிராதவர். இந்திய அணியில் உள்ள யாருக்காகவோ தான் அவர் இப்படி செய்துள்ளாரே தவிர தனக்காக செய்யவில்லை. ஸ்ரீசாந்துக்கு எதிராக யாரோ சதி செய்வதால் தான் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த வழக்கில் போலீசார் பல உண்மைகளை மறைக்கின்றனர். இருப்பினும் நீதித் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் அவருக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார் கண்ணீர் மல்க.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications