ராஜ்யசபா வேட்பாளர் யார்? பெரும் குழப்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!
சென்னை: தமிழகத்தில் ராஜ்யசபா வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெரும் குழப்பம் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற இருக்கிறது. 151 எம்.எல்.ஏக்களை கைவசம் வைத்திருக்கும் அ.தி.மு.க. 4 ராஜ்யசபா வேட்பாளர்களை நிறுத்தலாம். ஒரு எம்.பியை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. இதனடிப்படையில் எஞ்சியுள்ள எம்.எல்.ஏக்கள் வாக்குகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக அளிக்கும் என்று தெரிகிறது. ஆனால் அதிமுக ஆதரவுடன் நிறுத்தப்படக் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் யார் என்பதை அக்கட்சி முடிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் செயலாளர் தா. பாண்டியன், முதல்வர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தம்மை சந்தித்ததாகவும் தம்மையே ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளராக நிறுத்த ஜெயலலிதா விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
ஆனால் தங்களது கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்பதை இன்னொரு கட்சியின் தலைமை எப்படி தீர்மானிக்கலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தா. பாண்டியனுக்கு அந்த கூட்டத்திலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். தா.பாண்டியனைத் தவிர பெரும்பாலானோர் டி. ராஜாவே எம்.பி.யாக மீண்டும் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே தங்களுக்கு ஆதரவு தரக் கோரி முதல்வர் ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான பரதனும் சுதாகர் ரெட்டியும் சந்திக்கக் காத்திருக்கின்றனர். இதற்கான அப்பாயிண்ட்மெண்ட்டை வாங்கித் தராமல் தா.பாண்டியன் இழுத்தடிக்கிறார் என்றும் அவர் மீது புகார் வாசிக்கிறது அக்கட்சி வட்டாரங்கள். தா. பாண்டியனைப் பொறுத்தவரையில் போராடியாவது எம்.பி.யாகிவிடுவது என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தாக்கியிருக்கும் 'ராஜ்யசபா' தேர்தல் புயல் ஓரிரு நாட்களில் கரையைக் கடக்கும்.. அப்போதுதான் தா.பாண்டியன் 'வேட்பாளராக' கரை சேர்வாரா என்பது தெரியவரும்..
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications