குஜராத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பறைசாற்றும் ரதயாத்திரையும் ரம்ஜானும்!
அகமதாபாத்: பூரி ஜெகநாதர் யாத்திரை... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த பூரி ஜெகநாதர் யாத்திரை ஒடிஷாவில்தான் நடைபெறும்.. ஆனால் அதே காலகட்டத்தில் குஜராத்தையும் அனைத்து இன மக்களையும் ஒருங்கிணைக்கும் நிகழ்வாக ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
பூரி ஜெகநாதர் யாத்திரை. ஒடிஷா மாநிலத்தில் மிகப் பெரிய தேரோட்ட நிகழ்வாக நடத்தப்படும். குஜராத் மாநிலத்திலும் ஆண்டுதோறும் பூரி ஜெகநாதர் யாத்திரை வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. அதாவது நம்ம ஊர் ஆடி மாத திருவிழா போல..
இந்த ஆண்டும் குஜராத்தில் களைகட்டியிருக்கிறது பூரி ஜெகநாதர் யாத்திரை. குஜராத் தலைநகர் அகமதபாத்தில் இந்த ரத யாத்திரையை முதல்வர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நம்மூர் கலசங்கள் போல ஜெகநாதர், பலராம், சுபத்ரா ஆகிய தெய்வங்களுக்கு சுமந்தனர் பக்தர்கள்.
ஒருமைப்பாடு
அகமதாபாத் மட்டுமின்றி குஜராத் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒலி பெருக்கிகள் அலற பூரி ஜெகநாதர் யாத்திரை களைகட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மற்றொரு விஷேசம்.. ரஜ்மான் நோன்பை கடைபிடிக்கும் முஸ்லிம்களும் கூட இந்த ரத யாத்திரையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகின்றனர்.
முஸ்லிம்களின் அனுபவம்
இந்த யாத்திரையில் கலந்து கொண்ட ஷாபுர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் கூறுகையில், ஆண்டுதோறும் ஜெகநாதர் யாத்திரையில் கலந்து கொள்வேன். மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். இது அனைத்து மக்களின் திருவிழா என்கிறார்.
136வது ரத யாத்திரை
குஜராத்தில் தற்போது நடைபெற்று வருவது 136வது ரதயாத்திரை. இதையொட்டி நடைபெறும் கலச யாத்திரையும் புகழ் பெற்றது