For Daily Alerts
Just In
பெங்களூரில் கறுப்பு நாள் கடைபிடித்த காஷ்மீர் பண்டிட்டுகள்
பெங்களூர்: ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு எதிராக 82ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 13-ந் தேதி நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களை நினைவுகூரும் வகையில் பெங்களூரில் கறுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
1931ஆம் ஆண்டு ஜூலை 13-ல் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பண்டிட்டுகள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் வெளியேறி அகதிகளாக பிற நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட நாளை கறுப்பு நாளாகவும் பண்டிட்டுகள் கடை பிடித்து வருகின்றனர்.
பெங்களூரில் வாழ்ந்து வரும் காஷ்மீர் பண்டிட்டுகளும் 13-ந் தேதியை கறுப்பு நாளாக கடைபிடித்தனர். இந்நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பண்டிட்டுகள் அமைப்பின் தலைவரான ஆர்.கே. மட்டூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
English summary
Members of Panun Kashmir's Karnataka chapter observed by July 13 as the 82nd Black Day.
Story first published: Monday, July 15, 2013, 13:27 [IST]