கேளா காதினராக மத்திய அரசு: பெட்ரோல் விலை உயர்வுக்கு கருணாநிதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Put a full stop to increasing petrol prices, Karunanidhi says
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை அடிக்கடி உயர்த்தினால் விலைவாசியும் உயர்கிறது என்று எத்தனை முறை திமுக எடுத்துச் சொன்னாலும் மத்திய அரசு கேளாக்காதினராகவே இருக்கின்றனர் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரு.1.55 உயர்த்தப்பட்டு அது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆறு வாரங்களில் 4வது முறையாக விலை அதிகரிப்பட்டு, மொத்தம் இந்த ஆறு வாரங்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.12 உயர்த்தப்பட்டுள்ளது.

இப்படி பெட்ரோல் விலை உயர்வை அடிக்கடி ஏற்படுத்துவதன் தொடர் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்த விஷயத்தில் எத்தனை முறை திமுக சார்பில் எடுத்துரைத்தும், மத்திய அரசு கேளாக்காதினராகவே உள்ளனர்.

எனவே, உடனடியாக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+