For Daily Alerts
Just In
கேளா காதினராக மத்திய அரசு: பெட்ரோல் விலை உயர்வுக்கு கருணாநிதி கண்டனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரு.1.55 உயர்த்தப்பட்டு அது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆறு வாரங்களில் 4வது முறையாக விலை அதிகரிப்பட்டு, மொத்தம் இந்த ஆறு வாரங்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.12 உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படி பெட்ரோல் விலை உயர்வை அடிக்கடி ஏற்படுத்துவதன் தொடர் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்த விஷயத்தில் எத்தனை முறை திமுக சார்பில் எடுத்துரைத்தும், மத்திய அரசு கேளாக்காதினராகவே உள்ளனர்.
எனவே, உடனடியாக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Criticising the Centre for "turning a deaf ear" to repeated suggestions on controlling petrol prices, DMK chief M Karunanidhi on Monday demanded that government "put a full stop" to it by taking constructive steps immediately.
Story first published: Monday, July 15, 2013, 16:27 [IST]