ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை 'சற்றே' நிதானப்படுத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை!

Subscribe to Oneindia Tamil

Rupee gains after RBI takes steps to tighten liquidity
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிராக தொடர்ந்து சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு, இன்று காலை 30 காசுகள் உயர்ந்து சற்றே ஆறுதல் தந்தது.

ரிசர்வ் வங்கியின் ரொக்க நீர்ம நிலைக் கட்டுப்பாட்டின் பலனாக ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. நேற்று மாலை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 59.76/77 ஆக இருந்தது. இன்று காலை அது 50.40 ஆக உயர்ந்தது. பின்னர் 59.53/54 ஆக நிலை பெற்றது.

10 ஆண்டு கடன்பத்திரங்களின் வருவாய் 33 புள்ளிகள் அடிப்படையில் 8.50 சதவீதம் உயர்ந்துள்ளது. இது கடந்த மே 2012 லிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில் மிக அதிக அளவாகும்.

தாம்சன் ராய்ட்டர்ஸ் இந்தியா தகவலின்படி, ஆண்டு வட்டி வீதம் 41 புள்ளிகள் அடிப்படையில் 9.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஐந்தாண்டு அடிப்படையிலான வட்டி வீதம் 27 புள்ளிகள் அடிப்படையில் 8.45 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரொக்க வீதத்தைப் பொறுத்தவரை, நேற்றைவிட இன்று 4.5 சதவீத உயர்வு காணப்படுகிறது.

மேலே நாம் பார்த்த அத்தனை காரணிகளும், பணத்தின் மதிப்பை தூக்கி நிறுத்தத் தேவையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட உடனடி நடவடிக்கையின் பலன்கள் இவை. தொடர்ந்து மேலும் சில பணவியல் கொள்கை மாறுதல்களை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவிருக்கிறது.

ஆனால் இது குறுகிய கால பலன்கள்தான். நிரந்தரமாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவது ரிசர்வ் வங்கியின் கையில் மட்டுமில்லை! வலுவான முதுகெலும்பு கொண்ட பொருளாதாரம் தேவை. அதற்கு எந்த வெளி நிர்பந்தங்களுக்கும் பணியாமல், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் நிர்வாகம் தேவை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+