For Daily Alerts
Just In
4வது நாளாக தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்!
சென்னை: தெலுங்கானாவுக்கு எதிராக போராட்டம் தொடருவதால் ஆந்திராவுக்கு தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் 4வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகளும், போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன. இதனால் தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கான பெரும்பாலான பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து நாள் ஒன்றுக்கு இயக்கப்படும் 234 பேருந்துகளில் தற்போது 50 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் கூட காளஹஸ்தி,நெல்லூர் வரையே செல்கின்றன.
இதேபோல் கிருஷ்ணகிரி, வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
Comments
English summary
Public transport services to Andhra Pradesh continued to remain affected for the 4th day on Saturday over the unrest following the decision to create a separate Telangana State.
Story first published: Saturday, August 3, 2013, 12:08 [IST]