இஷ்ரத் ஜஹான் வழக்கு: மீண்டும் தலைமறைவானார் பிபி பாண்டே!

குஜராத்தின் அகமதாபாத்தில் 2004ஆம் ஆண்டு மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் அண்மையில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிபி பாண்டே உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு சுட்டுக் கொன்றனர் என்றும் அது போலி என்கவுன்ட்டர் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி பிபி பாண்டே தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் தமக்கு எதிரான புகாரை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் உச்சநீதிமன்றமோ விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து விசாரணை நீதிமன்றத்துக்கும் ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே வந்து ஆஜரானார். மேலும் தமக்கு முன் ஜாமீன் கோரியும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் இம்மனுக்களை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் குஜராத் உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாண்டேவை கைது செய்ய நேற்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சனா தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பாண்டேவின் முன்ஜாமீன் மனுவை ஆகஸ்ட் 12-ந் தேதியன்று விசாரிப்பதாக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அவரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது.
இதனால் பிபி பாண்டே எந்நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்ற நிலைமை உருவாகி இருந்தது. இந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பிபி பாண்டே மீண்டும் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐக்கு உதவுமாறு அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளையும் குஜராத் மாநில காவல்துறை தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications