சுதந்திர தினம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு: பார்சல் அனுப்ப 3 நாட்கள் தடை
சென்னை: சுதந்திர தினத்தன்று சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
ரயில்களில் பார்சல் அனுப்ப மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழகம் முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே கூடுதல் டி.ஜி.பி. சேகர், டி.ஐ.ஜி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் ரயில்வே போலீசார் நேற்று மாலை முதல் பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் முழுமையாக சோதனை செய்யப்படுகிறார்கள்.24 மணி நேரமும் 3 ஷிப்டு முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொண்டு வரும் உடமைகளும் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. ரயில் நிலையத்திற்குள் நுழைவு வாசல் வழியாக மட்டுமே பயணிகள் வரவேண்டும். மற்ற வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
போலீசார் கண்காணிப்பு
வெடிகுண்டு சோதனை கருவி மூலமும், நாய் மூலமும் ரயில் நிலையத்தின் முக்கிய பகுதிகள் சோதனை செய்யப்படுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கோபுரத்தின் மேல் பகுதியிலும், மூர் மார்க்கெட் 10 அடுக்கு மாடி கட்டிடத்திலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார ரயில் நிலையத்திலும்
மூர் மார்க்கெட் மின்சார ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியாக யார் நின்றாலும் போலீசார் பிடித்து விசாரிக்கிறார்கள். சாதாரண உடையிலும் போலீசார் ரயில் நிலையங்களில் கண்காணிக்கிறார்கள்.
பார்சல் அனுப்ப தடை
மேலும் ரெயில்களில் பொருட்கள் அனுப்ப இன்று முதல் 3 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள் போன்ற அழுகும் பொருட்கள் தவிர மற்ற பொருட்கள் எதுவும் பார்சலில் அனுப்புவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தீவிர பரிசோதனைக்கு பிறகே காய்கறிகள்,பழங்கள் பார்சல் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

மதுரை, கோவையில உஷார்
இந்த உச்சக்கட்ட பாதுகாப்பு 16-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதேபோல தாம்பரம், மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் கூடும் இடங்களில்
இதேபோல மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்களில் பலத்த சோதனை செய்யப்படுகிறது. அனைவரின் கைப்பைகளும் பரிசோதனை செய்யப்பட்டு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications