ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயில் கோபுர கலசம் கீழே விழுந்ததால் ஆந்திராவில் பரபரப்பு!
ஸ்ரீகாளகஸ்தி: ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்ததால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. இதனால் ஆந்திர மாநில மக்கள் சென்டிமென்ட் திலகங்களாகவும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் முக்கிய கோயிலான ஸ்ரீகாளகஸ்தியின் கோபுரம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அதேபோல் கோபுர கலசங்களும் கீழே விழுந்திருந்தன. இதனால் இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டுவிட்டதாக கருதப்பட்டது.
தற்போது தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திராவே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இந்நிலையில் திடீரென ஸ்ரீ காளகஸ்தி கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
500 ஆண்டுகால பழமை வாய்ந்த சிவன் கோயில் கலசரம் உரிய பரபரப்பின்றிதான் கீழே விழுந்ததாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.