ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்! 1 மில்லியன் டாலர் ஜாமீன் தொகை கோருகிறது!

ஈராக்கின் பஸ்ராவில் கச்சாஎண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு வந்தது இந்திய அரசுக்கு சொந்தமானது எம்.டி. தேஷ் சாந்தி எண்ணெய் கப்பல். இந்தக் கப்பலை ஈரான் கடற்பரப்பில் வழிமறித்த அந்நாட்டு கடற்படை பந்தார் அப்பாஸ் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறை பிடித்து வைத்திருக்கிறது.
இது இந்திய அரசுக்கு பேரிடியாக விழுந்துள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறி ஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா மேற்கொண்டு வரக் கூடிய நட்புநாடு. ஆனால் ஈரானே, இந்தியாவின் எண்ணெய் கப்பலை இடைமறித்து நிறுத்தியது ஏன் என்ற குழப்பம் இந்திய அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த ஈரான், தங்களது நாட்டு கடற்பரப்பில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்த காரணத்தாலேயே இந்திய எண்ணெய் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனில் 1 மில்லியன் டாலர் உத்திரவாத தொகை அளிக்கவும் ஈரான் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈராக் - இந்திய நட்புறவுக்கு பதிலடி
ஈரான் மீதான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடையைத் தொடர்ந்து அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டு ஈராக்கிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை செய்து வருகிறது. மேலும் ஈராக் பிரதமர் இந்தியாவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டிருந்த போதுதான் ஈராக்கில் இருந்து வந்த இந்திய எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்தது.
ஈராக்- இந்தியாவுடனான நெருக்கமான உறவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் இப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்கின்றன அரசியல் பார்வையாளர்கள்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications