ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்! 1 மில்லியன் டாலர் ஜாமீன் தொகை கோருகிறது!

ஈராக்கின் பஸ்ராவில் கச்சாஎண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு வந்தது இந்திய அரசுக்கு சொந்தமானது எம்.டி. தேஷ் சாந்தி எண்ணெய் கப்பல். இந்தக் கப்பலை ஈரான் கடற்பரப்பில் வழிமறித்த அந்நாட்டு கடற்படை பந்தார் அப்பாஸ் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறை பிடித்து வைத்திருக்கிறது.
இது இந்திய அரசுக்கு பேரிடியாக விழுந்துள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறி ஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா மேற்கொண்டு வரக் கூடிய நட்புநாடு. ஆனால் ஈரானே, இந்தியாவின் எண்ணெய் கப்பலை இடைமறித்து நிறுத்தியது ஏன் என்ற குழப்பம் இந்திய அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த ஈரான், தங்களது நாட்டு கடற்பரப்பில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்த காரணத்தாலேயே இந்திய எண்ணெய் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனில் 1 மில்லியன் டாலர் உத்திரவாத தொகை அளிக்கவும் ஈரான் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈராக் - இந்திய நட்புறவுக்கு பதிலடி
ஈரான் மீதான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடையைத் தொடர்ந்து அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டு ஈராக்கிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை செய்து வருகிறது. மேலும் ஈராக் பிரதமர் இந்தியாவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டிருந்த போதுதான் ஈராக்கில் இருந்து வந்த இந்திய எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்தது.
ஈராக்- இந்தியாவுடனான நெருக்கமான உறவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் இப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்கின்றன அரசியல் பார்வையாளர்கள்.
-
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
தேன்கூடு ஈரான்.. பாகிஸ்தான் செய்ய போகும் பெரிய உதவி.. இஸ்லாமாபாத் வரும் அமெரிக்க 'மாப்பிள்ளை' -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான்












Click it and Unblock the Notifications