காற்று குறைந்தது.. மின் உற்பத்தி இறங்கியது.. மீண்டும் பல இடங்களில் 'பவர் கட்'!
சென்னை: கடந்த சில மாதங்களாக கிட்டத்தட்ட 24 மணி நேரமும் மின்சார விநியோகம் என்று இருந்த சந்தோஷ நிலை மாறி - சென்னை தவிர - தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கொடுமையான மின்வெட்டிலிருந்து தப்பி சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த மக்கள் இந்த மின்வெட்டால் மறுபடியும் சோர்வடையத் தொடங்கியுள்ளனர்.
காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால்தான் இந்த மின்வெட்டு என்று கூறப்படுகிறது.

பல மணி நேர மின்வெட்டில் சிக்கித் தவித்த தமிழகம்
சில மாதங்களுக்கு முன்பு வரை பல மணி நேர மின்வெட்டில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்தது தமிழகம்.

ஷிப்ட் முறையில் வெட்டு
ஷிப்ட் முறையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் அதிகபட்சம் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.

மழையும் - காற்றும்
இந்த நிலையில், தென் மேற்குப் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. மேலும் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்தது. இதனால் மின்வெட்டு கிட்டத்தட்ட முழுமையாக நீங்கியது.

எங்கு பார்த்தாலும் கரண்ட்...
கார்ட்டூன் போட்டுக் கிண்டலடிக்கும் வகையில் இருந்த தமிழக மின் நிலை அப்படியே முழுமையாக மாறியது. மின்வெட்டு என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு மின்வெட்டு முழுமையாக அகன்றது.

24 மணி நேர மின்சாரம்
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அறவே நீங்கியது அல்லது மின்வெட்டு மிக மிக குறைவாக இருந்தது.

காற்று நின்றது
இந்த நிலையில் தற்போது காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 3,200 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி, நேற்று காலை நிலவரப்படி 360 மெகாவாட்டாக குறைந்தது.

மத்திய மின்சாரமும் குறைந்தது
அதேபோல, மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தின் அளவும் கணிசமாக குறைந்தது. இதனால் தமிழகத்தின் மொத்த மின்தேவையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1650 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிலவியது.

மறுபடியும் முதல்ல இருந்தா...
இந்த மின்வெட்டு மக்களிடையே மறுபடியும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஷிப்ட் போட்டு கரண்டடை கட் செய்யப் போகிறார்களோ என்ற அச்சமும் அவர்களிடையே எழுந்துள்ளது.
அதற்குள் லோக்சபா தேர்தல் வந்து விட்டால் நல்லாருக்கும்...!!
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications