போலி என்கவுண்டர் வழக்குகளில் எங்களை காக்க மோடி தவறி விட்டார்- ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா
காந்திநகர்: போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி சஸ்பெண்ட் ஆன குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி டி.ஜி.வன்சாரா தற்போது தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு போலி என்கவுண்டர்களில் சிக்கிய தன்னையும், பிற காவல்துறை அதிகாரிகளையும் காக்காமல், தங்களைக் காக்கவே முதல்வர் நரேந்திர மோடியும், முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவும் முயல்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி தரப்புக்கு ஆதரவானவர் என்று கருதப்பட்ட வன்சாரா இப்படி திடீரென பல்டி அடித்திருப்பதால் புதுப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு போலி என்கவுண்டர் வழக்குகளில் சிக்கியவர் வன்சாரா என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பதவியை ராஜினாமா செய்து குஜராத் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் வன்சாரா. அதில், முதல்வர் மோடியையும், ஷாவையும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்தக் கடிதத்தில், முதல்வர் மோடியும், முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவும் காவல்துறையினரைக் காக்க முயற்சிக்கவில்லை. மாநிலக் காவல்துறையினரின் நலனில் இருவருக்கும் அக்கறை இல்லை.
பல்வேறு போலி என்கவுண்டர் வழக்குகளில் என்னை அரசு ஆதரிக்காதது அதிர்ச்சி தருகிறது. மாநில காவல்துறையினரை தனது அரசியல் லாபத்திற்காக தவறாகப் பயன்படுத்தியவர் அமீத் ஷா.
போலி என்கவுண்டர் வழக்குகளில் தங்களைக் காத்துக் கொள்ளவே முயல்கின்றனர் மோடியும், ஷாவும். இதில் ஈடுபட்ட அத்தனை காவல்துறையினரையும் சிறையில் வைக்கவே அவர்கள் விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார் வன்சாரா.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications