மோடி ராஜினாமா செய்யக் கோரி குஜராத் பந்த்.. காங். அழைப்பு
Subscribe to Oneindia Tamil

இன்று இந்த பந்த் நடக்கிறது. இருப்பினும் பந்த்திற்கு ஆதரவு கிடைத்திருப்பதாக தெரியவில்லை.
வன்சாரா கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மோடி பொறுப்பேற்க வேண்டும். தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா நேற்று கூறுகையில், இந்த அரசு ஒரு நாள் கூட பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. மக்களையும், வியாபாரிகளையும் பந்த்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அரசு மிரட்டி வருகிறது. இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு மக்கள் பங்களிப்பைத் தடுக்கப் பார்க்கிறது.
வெள்ளிக்கிழமை மகாவீர் ஜெயந்தியாகும். எனவே இந்த அரசு எடுக்கும் வன்முறைத் தனமான முடிவுகளை எதிர்க்க நாங்கள் அமைதி வழியைக் கையாளுவோம். அகிம்சை வழியில் இந்த அரசை எதிர்த்துப் போராடுவோ்ம் என்றார்.












Click it and Unblock the Notifications