எருதுவிடும் விழாவில் இளைஞர் பலி.. போலீசாரை கல்வீசி தாக்கிய பொதுமக்கள்.. 37 பேர் மொத்தமாக கைது!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழாவில் காளை முட்டி இளைஞர் பலியான நிலையில், காவல்துறையினர் வாகனங்கள் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இந்த மோதலில் காவலர் திருமால் காயமடைந்த நிலையில், 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கல்நார்சாம்பட்டியில் எருது விடும் விழாவில் மாடு முட்டி விழுந்த இளைஞரை காவல்துறை தாக்கியதால் இறந்துவிட்டதாக கூறி போ லீசாரை முற்றுகையிட்ட மாடுபிடி வீரர்களால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியில் பொங்கல் திருவிழா முடிந்த அடுத்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் எருது விடும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் இன்று எருதுவிடும் விழா நடைபெற்றது. காலை முதல் நடைபெற்ற எருதுவிடும் விழாவில், ஏராளமான மாடுகள் சீறி பாய்ந்தன.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் காலை 8 மணி முதல் 2 மணி வரை அளவு எருது விடும் திருவிழா நடைபெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மாலை 3 மணி வரை இந்த இறுதி விடும் திருவிழா நடைபெற்றது. அப்போது 2.30 மணி அளவில் திடீரென எருது ஒன்று சீறிப் பாய்ந்தது. அப்போது பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த தவுலத் மகன் முஷரப் (19) என்ற இளைஞரை மாடு முட்டியதில் காயமடைந்து கீழே விழுந்தார்.
ஆனால் இதனையறியாமல் காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே அதிக ரத்தங்கள் வெளியேறி மயக்கம் அடைந்தார். மேலும் முறையான மருத்துவ முகாம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சக நண்பர்களே முஷரப்பை தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முஷரப் உயிரிழந்தார்.
இந்த தகவலையடுத்து ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவல்துறை வாகனங்கள் நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில், காவலர் திருமால் காயமடைந்தார். இந்த நிலையில் காவல்துறை வாகனங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications