ரியல் மேன் vs வைல்டு.. காட்டில் 10 வருஷமா.. தில்லாக வசிக்கும் குடும்பம்! காரணத்தை கேட்டா ஆடிடுவீங்க!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் நடு காட்டில் வாழ்ந்து வரும் இரண்டு குடும்பத்தினர் தங்களை காடுகளை விட்டு அப்புறப்படுத்தி வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்றும், காட்டுக்கு வெளியே தங்க இடம் ஒதுக்கி தரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்த இரண்டு குடும்பத்தினரும் கடந்த 10 ஆண்டுகளாக காட்டுக்கு நடுவே வாழ்ந்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தின் சிக்கமகளூரு மாவட்டம் முடிகெரே தாலுகாவில் உள்ள சரகோடு தட்கோலா காப்புக்காடு பகுதியில்தான் இவர்கள் வசித்து வருகின்றனர். இந்த காட்டில் மான்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கேற்றார் போல புலிகளின் நடமாட்டமும் அதிகம். எனவே இவர்கள் ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்தபடி வாழ்ந்து வருகிறார்கள். எனவே இங்கிருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் இப்போது இருப்பதை போன்று மின்சார வசதிகளெல்லாம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கிடையாது. அப்படியான காலகட்டத்தில்தான் இந்த காட்டில் சுமார் 80 குடும்பங்கள் குடியேறியது. இவர்கள் காட்டில் உள்ள சுள்ளிகளை சேகரித்தும், விறகுகளை வெட்டியும் அன்றாடம் பிழைப்பை ஓட்டி வந்தனர். அதேபோல காட்டில் கிடைக்கும் தேனை விற்பனை செய்தும் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்களை காட்டிலிருந்து அப்புறப்படுத்த வனத்துறை முடிவெடுத்தது.

10 வருஷம்
இந்த 80 குடும்பங்களில் 78 குடும்பங்கள் வெளியேற ஒப்புக்கொண்டன. ஆனால் 2 குடும்பங்கள் மட்டும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து இரண்டு குடும்பங்களை தவிர்த்து மீதமுள்ள குடும்பங்களை அதிகாரிகள் வெளியேற்றி காட்டுக்கு வெளியே ஒரு குடியிருப்பில் தங்க வைத்தனர். இதெல்லாம் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதில் மீதமிருந்த இரண்டு குடும்பத்தினர் மட்டும் தனியே வசித்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல வன பரப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. மட்டுமல்லாது காட்டு உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது.

கோரிக்கை
இதன் காரணமாக இந்த இரண்டு குடும்பத்தினரும் காட்டை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். ஆனால், ஊருக்குள் இடம் வாங்கும் அளவுக்கு இவர்களிடம் காசு இருக்கவில்லை. எனவே அரசாங்கத்திடமும், வனத்துறையினரிடமும் தங்களை காட்டிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கையின் மீது யாரும் செவி சாய்க்கவில்லை. ஏறத்தாழ அனைத்து அரசு அதிகாரிகளை சந்தித்தும் மனு கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் இந்த மனுவின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மீதமிருக்கும் நாட்களை இவர்கள் தங்கள் உயிரை கையில் பிடித்தவாறு நகர்த்தி வருவதாக கூறியுள்ளனர்.

தேர்தல்
தற்போது கர்நாடகாவில் தேர்தல் நெருங்கி வருவதால் இவர்கள் தொடர்பான செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த இரண்டு குடும்பத்தில் வசிக்கும் இளைஞர்கள் கூறியதாவது, "நாங்கள் காட்டு விலங்குடன் விலங்காக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கென எவ்வித பாதுகாப்பும் கிடையாது. வீட்டின் அருகில் காட்டுப்பன்றி, புலி உள்ளிட்ட விலங்குகளை சாதாரணமாக காண முடிகிறது. எங்காவது வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புவதெனில் மாலை 6 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். இல்லையெனில் காட்டில் சிக்கிக்கொள்வோம்.

மாற்று இடம்
இன்னும் சில நாட்கள் இங்கு இருந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு காட்டு விலங்குக்கு பலியாகிவிடுவோம். ஏனெனில் எங்கள் வீட்டிற்கு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது அங்கிருந்து வெளியே வருவதாக இருந்தாலும் சரி அடர்ந்த புதர்களை கடந்துதான் வர வேண்டும் போக வேண்டும். இந்த புதரில் எப்போது எது மறைந்திருக்கும் என்பதை கணிக்க முடியாது" என்று கூறியுள்ளார். இந்த தேர்தல் சமயத்திலாவது தங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டு குடும்பத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications