ஒரு வாலிபரை மணக்க.. 2 பெண்கள் போட்ட சண்டை! கடலில் குதித்த ஒரு பெண்..காப்பாற்ற போன காதலன் பரிதாப பலி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஒரு இளைஞரை திருமணம் செய்ய இரண்டு பெண்கள் அடித்துக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சண்டையில் அந்த இளைஞர் பரிதாபமாக பலியானது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் ராணிப்புறா பகுதியை சேர்ந்தவர் லியொட்டி ஜோஷ்வா. இவர் அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

அப்பகுதியை சேர்ந்த அஷ்மிதா என்ற பெண்ணை இவர் கடந்த 8 வருடமாக காதலித்து வந்தார். இவரை சில மாதங்களில் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.

புதிய காதலி டாக்லின்

புதிய காதலி டாக்லின்

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் டாக்லின் என்ற பெண்ணுடன் அந்த இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்து டேட்டிங் சென்றுள்ளனர். இந்த சந்திப்பு பாலியல் உறவில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் லியொட்டி ஜோஷ்வாவின் காதலி அஷ்மிதாவிற்கும் தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை வந்தது.

சோமேஸ்வரா கடல் பகுதியில் சந்திப்பு

சோமேஸ்வரா கடல் பகுதியில் சந்திப்பு

கடைசியில் சமாதானம் அடைந்த அஷ்மிதா.. அனைத்தையும் பேசி தீர்க்கலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். எனவே மூன்று பேரும் சந்தித்து பிரச்னையை பேசி தீர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதையடுத்து டாக்லின், லியொட்டி ஜோஷ்வா, அஷ்மிதா எல்லோரும் சோமேஸ்வரா கடல் பகுதியில் சந்திப்பு நடத்தி உள்ளனர். காதலனை யார் பிரிவது, யார் மணப்பது என்று மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அஷ்மிதா கடலில் குதித்தார்

அஷ்மிதா கடலில் குதித்தார்

அப்போது திடீரென இரண்டு பெண்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மாறி மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் மனம் உடைந்து போன அஷ்மிதா விரக்தியில் கடலில் குதித்து உள்ளார். காதலன் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறி அஷ்மிதா கடலில் குதித்துள்ளார். இவரை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்று லியொட்டி ஜோஷ்வாவும் கடலில் குதித்துள்ளார்.

காதலன் மரணம்

காதலன் மரணம்

கடலில் குதித்த அஷ்மிதாவை மீட்ட லியொட்டி ஜோஷ்வா நிறைய தண்ணீர் குடித்ததால் அங்கேயே மயங்கி விழுந்தார். ஆனால் கடலில் குதித்த அஷ்மிதா உயிர் பிழைத்துக் கொண்டார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட லியொட்டி ஜோஷ்வா வழியிலேயே மரணம் அடைந்தார். தண்ணீர் அதிகம் குடித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு இவர் பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+