திப்பு சுல்தான் பற்றி பேசினால் நாக்கை அறுப்போம்.. கர்நாடக அமைச்சருக்கு வந்த மிரட்டல்.. போலீசில் புகார்
பெங்களூரு: கர்நாடகாவில் திப்பு சுல்தான் குறித்து விமர்சித்த நிலையில், எனது நாக்கை வெட்டிவிடுவதாக சிலர் எனக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக அமைச்சர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சுதந்திர தினம் அன்று ஆளும் கட்சியான பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படம் இடம் பெறவில்லை.
இதற்கு பதிலாக வீர சவார்கர் படம் இடம் பெற்று இருந்தது. இதனால் இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

காரில் முட்டை வீசப்பட்டது
பாஜகவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் கார் மீது மூட்டை வீசப்பட்டது. அதேபோல், ஷிமோகா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் சவார்க்கரின் படம் கிழிக்கப்பட்டதால் வன்முறையும் வெடித்தது. இதேபோல் சுதந்திர தினத்தின் போது ஷிவமோகாவில் உள்ள அமீர் அகமது சர்கிள் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த வீரசவார்கர் போஸ்டரை, திப்பு சுல்தான் ஆதரவாளர்கள் அகற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது.

ரத யாத்திரை
இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மிகவும் பதற்றமாக சூழல் நிலவியதால், அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்களால் கர்நடகாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவார்க்கர் சித்தாந்தங்களை பரப்பும் நோக்கில் பாஜக சார்பில் 8 நாட்களுக்கு ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மைசுரூவில் சவார்க்கர் ரத யாத்திரை கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நாக்கு துண்டிக்கப்படும்
சவார்க்கர் ரத யாத்திரைக்கு கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முஸ்லிம் அமைப்புகளும் இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக பேசிய கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, ஷிவமோகா மாவட்டத்தில் சிறுபான்மையினர்கள் மத கலவரத்தை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், திப்பு சுல்தானை அவமரியாதையாக இனிமேலும் பேசினால் தனது நாக்கு துண்டிக்கப்படும் என்று எனது வீட்டிற்கு மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையில் அமைச்சர் ஈஸ்வரப்பா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

குண்டர்கள் என நான் கூறவில்லை
இது குறித்து அமைச்சர் ஈஸ்வரப்பா கூறுகையில், ''அனைத்து முஸ்லிம்களையும் குண்டர்கள் என நான் ஒருபோதும் கூறவில்லை. முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள முன்னோர்கள், பெருமக்கள் சமூக அமைதிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர். எனவே, தற்போது அராஜகங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று முஸ்லிம் பெருமக்களை கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications