முதலில் வெற்றி.. நள்ளிரவில் இடியாக இறங்கிய தோல்வி செய்தி.. கதறி அழுத காங்கிரஸ் பெண் வேட்பாளர்!
பெங்களூர் : கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் முதலில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் 3 முறை மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் அவர் தோற்றதாக அறிவிக்கப்பட்டதும், கதறி அழுதபடியே, வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினார் சௌமியா ரெட்டி.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக சி.கே ராமமூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளராக சவுமியா ரெட்டி, மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக கலிகவுடா ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் முதலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட 177 தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மையத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் வந்து நிலைமையை ஆராய்ந்தனர்.
பின்னர், தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. 3 முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. மின்னணு வாக்கு எண்ணிக்கையும் மீண்டும் நடைபெற்றதால் வாக்கு எண்ணிக்கை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. அதில், பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.
பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி 57 ஆயிரத்து 797 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 57 ஆயிரத்து 781 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் 1 ஆயிரத்து 226 வாக்குகள் பெற்றார்.

மறு வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி கண்ணீர் விட்டு அழுதுகொண்டே வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை கேட்டு சட்டப் போராட்டம் நடத்தியவர்களில் சவுமியா ரெட்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கர்நாடகா மாநில மகளிர் காங்கிரஸ் செயலாளராக இருந்து வருகிறார்.
-
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications