ஒருபக்கம் காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. மறுபக்கம் யாத்திரை! ராகுல் காந்தி வாக்கு எங்கு யாருக்கு?
பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற இருக்கும் நிலையில், கர்நாடகாவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இதில் வாக்களிப்பாரா? அவரது ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.

தலைவர் தேர்தல்
இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவடைந்தது.

வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸில் எதிர்ப்பலை இருப்பதால் கார்கேவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

ஒற்றுமை யாத்திரை
இதற்கிடையே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கர்நாடகாவில் முதல் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி பெல்லாரியில் தற்போது உள்ளார்.

வாக்களிப்பாரா?
இந்த நிலையில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி எங்கு வாக்களிப்பார் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், "பெல்லாரி மாவட்டம் சங்கனகுல்லு பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் முகாமில் ராகுல் காந்தி இந்த தேர்தலுக்கான வாக்கை செலுத்துகிறார்.

யாருக்கு ஆதரவு?
அவரோடு 40 காங்கிரஸ் நிர்வாகிகளும் வாக்களிக்க உள்ளார்கள். காங்கிரஸ் தலைவர் தேர்தலை பொறுத்தவரை காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையிலும் கலந்துகொண்டார். ஆனால், சசி தரூர் பங்கேற்கவில்லை. எனவே ராகுலின் ஆதரவும் கார்கேவுக்கே இருப்பதாக கூறப்படுகிறது.
-
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications