பெட்ரோல் டீசல் விலை உயர இதுதான் காரணமா.. கர்நாடகா மாநில அமைச்சரின் வினோத விளக்கம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ .100 ஐ தாண்டிய நிலையில், அம்மாநில அமைச்சர் உமேஷ் விஸ்வநாத் கத்தி, கொரோனா தொற்றுநோயின் தாக்கம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்து வருவதாக கூறினார்.
Recommended Video
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் (OMCs) எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதன்கிழமை தலா 35 பைசா உயர்த்தப்பட்டது.
புதிய விலை உயர்வுக்குப் பிறகு டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 106 க்கு மேல் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.அதே நேரத்தில் மும்பையில் லிட்டருக்கு ரூ .112 ஐ தாண்டியுள்ளது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் ரூ. 107 என்கிற அளவிலும் , சென்னையில் ஒரு லிட்டர்ரூ. 103 ரூபாய்க்கு மேல் விலை அதிகமாக உள்ளது . பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100 க்கும் குறைவாக இருக்கும் முக்கிய நகரங்கள் நாட்டில் எதுவும் இல்லை.

எவ்வளவு
டீசல் விலைகளும் கடந்த சில நாட்களாக இதேபோன்ற உயர்வை சந்தித்துள்ளன. தேசிய தலைநகரான டெல்லியில் ஒரு லிட்டர் கிட்டத்தட்ட ரூ .95 ஆகவும், மும்பையில் லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ .103 ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் டீசல் லிட்டர் ரூ .98 க்கும், சென்னையில் லிட்டருக்கு ரூ .99 க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை
கர்நாடகாவில் பெட்ரோலில் புதிய விலை உயர்வுக்குப் பிறகு பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 109 க்கு மேல் சில்லறை விற்பனை செய்யப்படுகிறது, அதே நேரத்தில் டீசல் லிட்டருக்கு ரூ .100 க்கு மேல் விற்கப்படுகிறது. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில், பெட்ரோலின் விலை ரூ .108 முதல் ரூ .110 வரை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரி 59.19 ரூபாய் (மத்திய மற்றும் மாநில வரிகள்) ஆகும். இதில், மாநில அரசு ரூ. 22.5, மத்திய அரசு ரூ .33 மற்றும் டீலர் கமிஷன் ரூ. 3.69 ஆகும்.

ஜிஎஸ்டி வரி
டீசலுக்கு, மதிப்பு கூட்டு வரியுடன் ஒரு லிட்டருக்கு ரூ .17.89 ஐ வரியாக மாநில அரசு வசூலிக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசலை விலையை குறைக்க ஜிஎஸ்டியின் கீழ் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தபோதிலும், மாநில அரசுகள் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை இழக்க நேரிடும் என்பதால் அதை எதிர்த்து வருகின்றன.

கொரோனா
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு காரணம் கொரோனா தொற்றுதான் என்று கர்நாடக உணவு, குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் உமேஷ் விஸ்வநாத் கத்தி கூறினார். இது தொடர்பாக அவர் கூறும் போது, கொரோனாவை கட்டுப்படுத்த, செலவுகள் ஆகின்றன. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு பணம் தேவைப்படுவதால் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. இவை அனைத்தும் குறுகியதாக இருக்கும் என்றார்.

விலை குறைப்பு எப்போது
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, எரிபொருள் விலையை குறைப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்யும் என்று கூறினார். இருப்பினும், முதலமைச்சர் பொம்மை ஒரு எச்சரிக்கையையும் வைத்தார், எந்த வரி குறைப்பும் மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பொருத்தது, அக்டோபர் 30 அன்று ஹனகல் மற்றும் சிந்தகி நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications