Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்பை.. வெறுப்பு வென்றுவிட்டது.. நான் ஓய்வு பெறுகிறேன்.. காமெடியன் முனாவர் ஃபாரூகி பரபர அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி சில நாட்களுக்கு முன் கைதாகி விடுதலை செய்யப்பட்ட முனாவர் ஃபாரூகியின் காமெடி நிகழ்ச்சி நேற்று பெங்களூரில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்டான்ட் அப் காமெடியில் இருந்து மொத்தமாக வெளியேறுவதாக முனாவர் ஃபாரூகி அறிவித்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த முனாவர் ஃபாரூகி கடந்த ஜனவரி 1ம் தேதி மத்திய பிரதேசத்தில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். கொரோனா விதிகளை மீறியதாகவும், அனுமதி இன்றி கூடியதாகவும் இவர் கைது செய்யப்பட்டார்.

அதோடு இந்து கடவுள்கள் குறித்து இவர் தவறாக காமெடி செய்ததாகவும், அமைச்சர் அமித் ஷா குறித்து இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் இவர் மீது பாஜக எம்எல்ஏ மாலினி லட்சுமணன் சிங்கின் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் புகார் அளித்து இருந்தார்.

கைது

கைது

இதில் கைது செய்யப்பட்டவர் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். மத்திய பிரதேச நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் மறுத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இவர் ஜாமீன் பெற்றார். அதன்பின் விடுதலைக்கு பின் இவர் பெரிதாக எங்கும் காமெடி ஷோ செய்ய முடியவில்லை. பின்னர் சில நாட்களுக்கு முன் இவருக்கு நிறைய ஸ்டான்ட் அப் காமெடி ஷோ புக் ஆனது.

விடுதலை

விடுதலை

ஆனால் முனாவர் ஃபாரூகியின் ஷோ திட்டமிடப்பட்ட இடங்களுக்கு முன்பே வந்த பல்வேறு இந்து அமைப்புகள் இவரின் நிகழ்ச்சியை நடத்த கூடாது எச்சரிக்கை விடுத்தன. அதோடு போலீசாருக்கும் இது தொடர்பாக புகார்களை அளித்தனர். இதை தொடர்ந்து முனாவர் ஃபாரூகி நடத்த இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சிக்கல்

சிக்கல்

கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்தியா முழுக்க இவர் நடத்த இருந்த 12 நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்தும் இந்து அமைப்புகள் காட்டிய எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும். நேற்று பெங்களூரில் இவரின் நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. இதற்கு மோகன் கவுடா என்பவரின் இந்து ஜாக்ரான் சமிதி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

பெங்களூர் நிகழ்ச்சி

பெங்களூர் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சி நடந்தால் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கலவரம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பெங்களூர் போலீஸ் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்து, நிகழ்ச்சியை ரத்து செய்தது. இந்த நிலையில் ஸ்டான்ட் அப் காமெடியில் இருந்து மொத்தமாக வெளியேறுவதாக முனாவர் ஃபாரூகி அறிவித்துள்ளார்.

ஓய்வு

ஓய்வு

முனாவர் ஃபாரூகி வெளியிட்டுள்ள அறிவிப்பில்.. போதும்.. என்னால் இனியும் முடியாது. வெறுப்பு வென்றுவிட்டது. கலை இறந்துவிட்டது. தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வரும் எதிர்ப்புகள் காரணமாக இந்த நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. நிகழ்ச்சி நடத்துவதில் இருந்து நான் வெளியேறுகிறேன். இனி நிகழ்ச்சி நடத்த மாட்டேன். நான் சொல்லாத ஜோக்கிற்காக கைது செய்யப்பட்டேன்.

வெறுப்பு வென்றுவிட்டது

வெறுப்பு வென்றுவிட்டது

இப்போதே நிகழ்ச்சி நடக்கும் முன்பே பிரச்சனை செய்கிறார்கள். மறைந்த நடிகர் புனீத் ராஜ் குமாரின் அறக்கட்டளைக்கு நிதி உதவி அளிக்கவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதை கூட அனுமதிக்கவில்லை. இது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. என் நேரம் முடிந்துவிட்டது. எல்லோருக்கும் குட் பை, என்று முனாவர் ஃபாரூகி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+