பெங்களூருவில் பயங்கரம்.. அடுக்குமாடிக் குடியிருப்பில் கோர தீ விபத்து.. 2 பெண்கள் உடல் கருகிப் பலி
பெங்களூரு: பெங்களூருவில் தேவரசிக்கனஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உடல் கருகி உயிரிழந்தார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவின் தேவரசிக்கனஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 2ஆவது மாடியில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் அந்த வீட்டில் இருந்த பெண் உடல் கருகி உயிரிழந்தார்.
A cylinder Blast led to massive fire
— Gautam Gada (@GautamGada) September 21, 2021
Residential apartment Bengaluru Karnataka
Retweet#Bengaluru #Karnataka pic.twitter.com/hq93GdgTBd
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. சுமார் 90 நொடிகள் இருக்கும் அந்த வீடியோவின் இறுதியில் பால்கனியில் இருந்த அந்த இளம்பெண் மீது தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் உள்ளன.
இது தொடர்பாகப் பெங்களூரு தீயணைப்பு படைக்கு மாலை 4.40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்தக் கட்டிடத்தில் இருப்பவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளிலும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் அதே வீட்டிற்குள் மேலும் ஒரு பெண் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த கோர விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்,
சமையல் எரிவாயு கசிவின் காரணமாக இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications