கொடூர கொடுமை.. குழந்தையின் அந்தரங்க உறுப்பில் தீவைத்த அங்கன்வாடி ஆசிரியை.. கர்நாடகத்தில் அதிர்ச்சி
பெங்களூர்: கர்நாடகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 3 வயது நிரம்பிய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் தீக்குச்சியால் சூடுவைத்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி அருகே கோடிகெரே கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு ஏராளமான குழந்தைகள் சென்று வருகின்றனர்.
அங்கன்வாடி உதவியாளராகவும், ஆசிரியையாகவும் ரஷ்மி என்பவர் உள்ளார். இவர் குழந்தைகளை துன்புறுத்துவதாக அடிக்கடி புகார்கள் எழுந்தன.

சிறுநீர் கழித்த ஆண் குழந்தை
இந்நிலையில் அங்கன்வாடி மையத்துக்கு 3 வயது நிரம்பிய ஆண் குழந்தையும் சென்று வருகிறது. இந்நிலையில் அந்த ஆண் குழந்தை அடிக்கடி தான் அணிந்திருந்த ஆடையிலேயே சிறுநீர் கழித்து வந்துள்ளான். இதனை ஆசிரியை ரஷ்மி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அங்கன்வாடி சென்ற சிறுவன் தான் அணிந்திருந்த ஆடையிலேயே சிறுநீர் கழித்துள்ளான்.

சூடுவைத்த ஆசிரியை
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆசிரியை ரஷ்மி, சிறுவனின் அந்தரங்க உறுப்பில் தீவைத்து சுட்டுள்ளார். அதாவது தீக்குச்சியால் அவர் சூடு வைத்துள்ளார். இதனால் அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் அழுது துடித்துள்ளான். இதையடுத்து ஆண் குழந்தையை அவனது பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீஸ்
மருத்துவமனையில் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மருத்துவுமனையில் இருந்து குழந்தை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டான். இதற்கிடையே சம்பவம் குறித்து குழந்தையின் பெற்றோர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆசிரியை ரஷ்மி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

எஸ்பி கூறுவது என்ன?
இதுபற்றி தும்கூர் மாவட்ட எஸ்பி ராகுல் குமார் சாகாபூர்வாட் கூறுகையில், ‛‛அங்கன்வாடி சென்ற சிறுவன் அடிக்கடி ஆடையில் சிறுநீர் கழித்தார். இதனால் கோபமடைந்த ஆசிரியை குழந்தையின் அந்தரங்க உறுப்பில் சூடுவைத்துள்ளார்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார். மேலும் இந்த சம்பவம் குறித்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் விசாரணையை துவங்கி உள்ளனர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications