குஜராத்திலிருந்து கர்நாடகத்திற்குப் பரவிய கொரோனா.. இனிதான் ரொம்ப கவனம் தேவை.. சிந்தனையில் அதிகாரிகள்
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று 63 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது பாதிக்கப்பட்டதில் 32 பேர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருடன், பயண தொடர்பு கொண்டவர்கள் என்பதுதான்.
கர்நாடகாவில் கடந்த பல நாட்களாகவே, கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களாக மட்டும் பாதிப்பு என்பது அதிகரித்துள்ளது. இதற்கு ஊரடங்கு தளர்வு ஒரு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

குணமடையும் விகிதம்
சிகிச்சை பெறுவதை விடவும், குணமடைவோர் எண்ணிக்கை சுமார் ஒரு வாரமாக கர்நாடகாவில் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது குணமடைந்தவர்கள் விட சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மேலும் 11 நோயாளிகள் ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

கர்நாடக நிலவரம்
அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 925 என்ற அளவில் உள்ளது. இதில் 32 பேர் குஜராத்துடன் தொடர்பு உடையவர்கள். அனைவருமே பாகல்கோட் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அங்கே உள்ள சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூர் எப்படி
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், பெங்களூர் நகர்ப்பகுதியில் இன்று நான்கு பேருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. குஜராத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இது போன்ற வைரஸ் பரவியுள்ளது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அந்த மாநிலத்தில் சீனாவில் பரவிய எல் வகை வைரஸ் பரவி இருப்பதாக ஒரு தகவல் உள்ளது. இது மிக வேகமாகப் பரவக் கூடியது மற்றும் அதிகம் பேரை கொல்லக்கூடியது என்று கூறப்படுகிறது.

அதிக எச்சரிக்கை
குஜராத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அது போன்ற வைரஸ் பரவி விட்டால் மிகவும் ஆபத்தாகி விடுமோ என்ற அச்சம், கர்நாடக அதிகாரிகள் மத்தியில் இருக்கிறது. எனவே, இந்த நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்துள்ளனர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications