சமைக்காததால் மனைவி கொலை.. "கோபத்தில் செய்திருப்பார்".. கணவனை விடுதலை செய்த கர்நாடக நீதிமன்றம்!
பெங்களூர்: சமைக்காமல் இருந்த மனைவியை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த கணவனை விடுதலை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனைவியை கொலை செய்த கணவரை நீதிமன்றமே விடுதலை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுவதுடன், சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, குற்றவாளியான கணவர் உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விவரங்களை இங்கு காண்போம்.

இரண்டாவது திருமணம்..
கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள முடிகிரே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷா (43). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர், ராதா (33) என்ற பெண்ணை சுரேஷா கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முதலில், ஓராண்டு இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக போயிருக்கிறது. பின்னர் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

வீட்டில் சமைக்கவில்லை
இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து சுரேஷா கொஞ்சம் முன்னதாக வீடு திரும்பியுள்ளார். எப்போதும் வரக்கூடிய நேரத்துக்கு முன்கூட்டியே சுரேஷா வந்ததால், வீட்டில் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை. அப்போது அவரது மனைவி ராதாவிடம் ஏதாவது சமைத்து தருமாறு கூறியிருக்கிறார். ஆனால் அப்போது ராதா மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும், தன்னால் சமைக்க முடியாது என்றும், ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுமாறும் ராதா கூறியுள்ளார்.

அடித்துக் கொலை
ராதாவின் இந்த பதிலால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுரேஷா, வீட்டில் இருந்த ஒரு இரும்பு ராடை எடுத்து ராதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், சுரேஷாவை கைது செய்தனர். இந்த வழக்கை 2017-ம் ஆண்டு விசாரித்த மாவட்ட நீதிமன்றம், சுரேஷாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலை செய்து தீர்ப்பு
இந்த சூழலில், தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் சுரேஷா அண்மையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கானது, நீதிபதிகள் சோமசேகர், சிவசங்கர கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், "போலீஸ் மற்றும் அரசுத் தரப்பு விசாரணையில், சுரேஷாவின் மனைவி வீட்டில் சமைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுதான் குற்றவாளியை கோபமடையச் செய்து அவரது மனைவியை கொலை செய்ய தூண்டியுள்ளது.

கொலை
மனைவியை தண்டித்து அவரை காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சுரேஷா அவரை அடித்திருக்கிறார். ஆனால் மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில் அவர் இந்த காரியத்தை செய்யவில்லை. எனவே இந்தக் குற்றமானது ஐபிசி 300-வது பிரிவின் கீழ் (நோக்கமற்ற கொலை) தான் வரும். கொலை வழக்கான 302-இன் கீழ் வராது. எனவே அவர் செய்த குற்றத்துக்கு 6 வருடம் 22 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததே போதுமானது. அவரை உடனடியாக விடுதலை செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது" என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications