அந்தரங்க போட்டோ.. ஐஏஎஸ் ரோகினியுடன் மோதல்! ஹைகோர்ட் ஆர்டரால் கர்நாடகா ஐபிஎஸ் ரூபாவுக்கு சிக்கல்
பெங்களூர்: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரியின் அந்தரங்க போட்டோக்களை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது பேஸ்புக்கில் பகிர்ந்து 19 குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரோகினி சிந்தூரி ரூபாவுக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் ஐபிஎஸ் ரூபாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரூபா. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரபரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது ரூ.1 கோடி வாங்கி கொண்டு அவருக்கு சிறை அதிகாரிகள் சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாக புகார் தெரிவித்து பிரபலமானார்.

அதேபோல் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகினி சிந்தூரி. இந்நிலையில் கடந்த கடந்த பிப்ரவரி மாதம் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கும், ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது.
அதாவது ரோகினி சிந்தூரியின் தனது தனிப்பட்ட (அந்தரங்கம்) படங்களை 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார் என ரூபா ஐபிஎஸ் குற்றம்சாட்டினார். மேலும் ரோகினி சிந்தூரி அனுப்பியதாக கூறி 7 போட்டோக்களை ரூபா தனது பேஸ்புக்கில் பதிவிட்டார். அதோடு ரோகினி சிந்தூரி, முன்னாள் அமைச்சரான சாரா மகேசை உணவகத்தில் சந்தித்தது போன்ற போட்டோவையும் பகிர்ந்து விமர்சனம் செய்திருந்தார். அதோடு 19 முக்கிய குற்றச்சாட்டுகளை ரோகினி சிந்தூரி மீது ரூபா ஐபிஎஸ் கூறியிருந்தார்.
இது இரு அதிகாரிகள் இடையே கடும் மோதல் போக்கை ஏற்படுத்தியது. அதோடு ரோகினி சிந்தூரி தன்மீதான ரூபாவின் குற்றச்சாட்டுகளை முற்றுலுமாக மறுத்தார். அதோடு ரூபா ஐபிஎஸ் மனநலம் பாதித்தவர் என ரோகினி சிந்தூரி விமர்சனம் செய்தார். இருவரும் பொதுவெளியில் மோதிக்கொண்டனர். இதையடுத்து இருவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் இரு அதிகாரிகளும் கர்நாடகா தலைமை செயலாளரிடம் தனித்தனியே புகார்கள் வழங்கி இருந்தனர். இதற்கிடையே தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக ரூபா ஐபிஎஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். இதை செய்யவிட்டால் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் ரூபா ஐபிஎஸ் மன்னிப்பு கோரவில்லை. இதையடுத்து ரோகினி சிந்தூரி பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூபாவுக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் ரூபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவரும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். மேலும் இந்த வழக்கில் ஜாமீனும் அவரும் பெற்றார்.

இத்தகைய சூழலில் தான் தனக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ரூபா ஐபிஎஸ் சார்பில் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சீனிவாஸ் ஹரீஸ் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ரூபா ஐபிஎஸ் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு ரோகினி சிந்தூரி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இறுதியில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சீனிவாஸ் ஹரீஸ் குமார் ரூபா ஐபிஎஸ்ஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ரூபா ஐபிஎஸ்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ரோகினி சிந்தூரி ஐஏஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கை அவர் எதிர்கொள்ள வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருமணமான ஆண், வேறு பெண்ணுடன் 'லிவ்-இன்'உறவில் இருந்தால் குற்றம் அல்ல.. ஐகோர்ட் -
பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி! கடுமையாக வாதம் வைத்த போலீஸ்.. மனுதாரர் ட்விஸ்ட்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications