பெங்களுருவில் ஷாக்: இந்த மாதத்தில் மட்டும் 10 வயதுக்கு உட்பட்ட 472 குழந்தைகளுக்கு கொரோனா!
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களுருவில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாதம் மட்டும் 10 வயதிற்கு உட்பட்ட 472 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் இந்த எண்ணிக்கை 500 ஐ தாண்டும் அபாயம் உள்ளது.

அதிகரிக்கும் கொரோனா
நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 60,000-க்கும் மேற்பட்டோருக்கு சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் அடங்கி இருந்த இப்போது 60,000-ஐ கடந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் 80% சதவீத பாதிப்புகள் உள்ளன.

தடுப்பு வழிமுறைகள் தீவிரம்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மக்களிடம் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,886 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு
கர்நாடக தலைநகர் பெங்களுருவில் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாதம் மட்டும் 10 வயதிற்கு உட்பட்ட 472 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் இந்த எண்ணிக்கை 500 ஐ தாண்டும் அபாயம் உள்ளது. மொத்த நோயாளிகளில் 244 சிறுவர்கள், 228 பெண்கள் இருப்பது கூடுதல் அதிர்ச்சியை தருகிறது. மார்ச் முதல் வாரத்தில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே 8-11 வழக்குகள் இருந்தபோதிலும், கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 32-46 ஆக உயர்ந்துள்ளது.

பெற்றோர்கள் பாதுகாப்பு முக்கியம்
இது குறித்து கர்நாடகாவின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினர் கூறியதாவது:- ஒரு வருடத்திற்கு முன்பு, குழந்தைகள் மத்தியில் வைரஸ் பாதிப்பு ஏற்படாததால் பாதிப்புகள் அதிகமாக இல்லை. மேலும் லாக்டவுன் மூலமாக அவர்கள் வீடுகளில் இருந்தனர் ஆனால் தற்போது அவர்கள் பூங்காக்களில் விளையாடுகிறார்கள். அடுக்குமாடி வளாகத்தின் பொதுவான பகுதிகளில் விளையாடுகிறார்கள். அது போக குழந்தைகளிடம் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பித்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. எனினும் பெற்றோர்கள் இது குறித்து விழிப்புடன் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications