மசால் தோசை “பார்சல்”.. காங்கிரஸ் இன்னும் அனுப்பல! மோசடி பண்ணிட்டாங்க - ஏங்கும் பாஜக எம்பி தேஜஸ்வி
பெங்களூரு: காங்கிரஸ் கட்சி தனது வீட்டுக்கு பார்சல் தோசை அனுப்பி வைப்பதாக கூறிய நிலையில் 24 மணி நேரமாகியும் அது வரவில்லை ட்விட்டரில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்து உள்ளார்.
கர்நாடகா தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளக்காடாகின. கட்டிடங்கள், குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டன.
தலைநகர் பெங்களூரிலும் வழக்கத்தை விட அதிகளவில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வெள்ளத்தால் பல கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டது.

கனமழை வெள்ளம்
ஆகஸ்ட் 30ம் இரவு கொட்டிய கனமழையால் பெங்களூர் புறநகர் சாலையில் வெள்ளம் சூழ்ந்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குறிப்பாக அங்குள்ள ஐடி நிறுவன ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஊழியர்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். கடந்த 4 ஆம் தேதி மட்டும் 130 மில்லி மீட்டர் மழை பதிவானது.

ஐடி நிறுவனங்கள்
இதனால் பெல்லந்தூர் ஏரியில் இருந்து வெளியேறிய நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். கனமழை வெள்ளம் காரணமாக ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், தீர்வு கிடைக்காவிட்டால் நிறுவனங்களை வேறு இடத்துக்கு மாற்றுவதாகவும் ஐடி நிறுவனங்கள் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதின.

எதிர்க்கட்சிகள்
இந்த நிலையில் பெங்களூருவில் முறையான வடிகால் வசதி இல்லாததாலும், மழையை முன்கூட்டியே கணிக்காததன் காரணமாகவுமே மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அடுத்த ஆண்டு கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் வெள்ளத்தின் தாக்கம் தேர்தல் வரை எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

பாஜக எம்பி தேஜஸ்வி
ஒரு பக்கம் பெங்களூரு மாநகரம் வெள்ளத்தின் தவிக்க மறுபக்கம், பாஜகவின் இளைஞர் அணி தேசிய தலைவரும், பெங்களூர் தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா உணவகம் தோசை சாப்பிடும் வீடியோவை பதிவிட்டு விமர்சனம் செய்து இருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தேஜஸ்வி சூர்யாவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

தோசை வரவேயில்லை
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேஜஸ்வி சூர்யா வீட்டுக்கு தோசை பார்சல் செய்யப்போவதாக அறிவித்தது. இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள தேஜஸ்வி சூர்யா, "காங்கிரஸ் செய்தியாளர் சந்திப்பில் என் வீட்டுக்கு மசாலா தோசை பார்சல் அனுப்புவதாக கூறியது. 24 மணி நேரமாகியும் அது வரவில்லை. மோசடி செய்துவிட்டார்கள். தோசையை கூட முறையாக அனுப்பி வைக்க முடியாதவர்கள் நல்ல அரசை நடத்துவோம் என்று கனவு காண்கிறார்கள்." என்று பதிவிட்டுள்ளார்.
-
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications