ஓவர் ஆட்டம்.. ஒருத்தரும் மாஸ்க் போடல.. ஊரே திரண்ட கோயில் விழா.. இப்போ மொத்த கிராமத்துக்கும் சீல்
கர்நாடகாவில் உள்ள கிராமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது
பெங்களூரு: ஒரு திருவிழாவை நடத்தியதின் விளைவு, ஒட்டுமொத்த கிராமத்தையும் இழுத்து சீல் வைக்கும் நிலைமை வந்துவிட்டது..!
இப்போதைக்கு தமிழ்நாட்டை விட மோசமாக உள்ளது கர்நாடகத்தின் நிலைமை.. தினந்தோறும் தொற்று எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது.. பலி எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது.. அதனால், அங்கும் லாக்டவுன் போட்டுள்ளனர்.
எனினும், பொதுமக்கள் சில நேரங்களில், கட்டுப்பாடு இல்லாமல் நடமாடுகிறார்கள்.. அந்த வகையில், ஒரு கிராமத்தில் கொரோனாவை பற்றி கவலையேப்படாமல் ஒரு திருவிழாவை நடத்தி உள்ளனர்.. அந்த திருவிழாதான் இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளது..!

சிலை
கதக் மாவட்டம் நற்குண்ட் அருகே உள்ளது பனஹட்டி என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் ஒரு ஆஞ்சநேயர் சிலையை நிறுவ முயன்றனர்.. இதற்காக ஒருவிழாவே எடுத்து, அந்த பகுதி மக்கள் சிறப்பாக கொண்டாடினர்.. எல்லாருமே வீதிகளில் திரண்டனர்.. ஒருத்தரும் மாஸ்க் போடவில்லை.. தெருக்களில் திரண்ட, பொதுமக்கள், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை ஊற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவிழா
திருவிழா என்பதால், யாரும் காலில் செருப்பு இன்றியே கிராமம் முழுவதும் நடமாடி கொண்டிருந்தனர்.. ஒருவரையொருவர் முண்டியத்து கொண்டு, தண்ணீர் பானைகளை தலையில் வைத்து, ஆட்களின் மீது இறைத்து கொண்டிருந்தனர்..

விளையாட்டு
இதைதவிர, ஊர் எல்லையில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளையும் நடத்தினர்.. லாக்டவுன் அமலில் இருக்கிறதே என்ற நினைப்பு கொஞ்சமும் இல்லாமல், ஒரே இடத்தில் எல்லாருமே திரண்டனர்.. சமூக இடைவெளியும் இல்லை.. அத்தனை நாளும் வீடுகளிலேயே முடங்கி இருந்த மக்கள், கோயில் திருவிழா என்றதும், இப்படி திரண்டதால், தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

சீல்
இதனால், விதிகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்த கிராமத்தையும் தனிமைப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது..!
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications