அண்டை மாநிலங்களில் கொரோனா தீவிரம் - கர்நாடகாவிற்குள் நுழைய கடும் கட்டுப்பாடு அமல்
கேரளா, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாலை, ரயில் மற்றும் விமானம் என எந்த வழியாக வந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என கர்நாடகா மாநில அரசு தெரிவத்துள்ளது.
பெங்களூரு: கேரளா, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாலை, ரயில் மற்றும் விமானம் என எந்த வழியாக வந்தாலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கர்நாடகா மாநில அரசு தெரிவத்துள்ளது. இன்று முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிதும் குறைந்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் புதிதாக 6,281 பேருக்கும், கேரளாவில் 4,650 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அண்டை மாநிலங்களையும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்நாடகாவில் தலபாடி, சரத்கா, நெட்டானிக் - மத்நுரு, ஜல்சூர் ஆகிய 4 எல்லைகளை தவிர்த்து மற்ற அனைத்து எல்லைகளையும் மூட அம்மாநில மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாலை, ரயில் மற்றும் விமானம் என எந்த வழியாக வந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என கர்நாடகா மாநில அரசு தெரிவத்துள்ளது. இன்று முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்கக்கூடிய கோவிட்-19 நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.
கர்நாடகா மாநிலத்திற்குள் வரும் பயணிகள் சாலை, ரயில், விமானம் என எந்த வழியாக வந்தாலும் கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
கேரளாவில் இருந்து கர்நாடகா வருவோர் முக்கியமான நான்கு செக்போஸ்ட்கள் வழியாக மட்டுமே வர முடியும். மற்ற எல்லைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட நான்கு செக்போஸ்ட்கள் வழியாக வரும் போது மருத்துவர்களால் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். தக்ஷின கன்னடா மாவட்ட துணை ஆணையர் கே.வி.ராஜேந்திரா தெரிவித்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications