ஜிஎஸ்டியினால் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிப்பு - ஆர்பிஐ அறிக்கை
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பினை விட ஜிஎஸ்டியினால்தான் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
சென்னை: பணமதிப்பு நீக்கத்தின் போது இருந்த சிரமத்தை விட சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னர்தான் சிறு, நடுத்தர வணிகர்களின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடு முழுவதும் உயர்மதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இது பொது மக்களையும், தொழில் துறையினரையும் பாதித்தது. கறுப்பு மற்றும் கள்ள பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று மோடி கூறினாலும் பாதிப்பு என்னவோ மக்களுக்குத்தான். டிஜிட்டல் இந்தியா என்னும் முழக்கத்துடன் மின்னணு பணபரிவர்த்தனையை அறிமுகம் செய்யப்பட்டது. இது சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த அடியாக நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே வரி என்ற முழக்கத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் சரக்க மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. ஓராண்டுக்கு மேலான நிலையில் ஜிஎஸ்டியினால் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிறு வணிக நிறுவனங்கள் பாதிப்பு
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஏற்றுமதியானது பல்வேறு சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்த பாதிப்பு பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான பிறகு ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாகும்.

சிறு தொழில் மூலதனங்கள்
ஜிஎஸ்டி ரீஃபண்ட் கிடைக்கப் பெறுவதில் சிக்கல், உள்ளீட்டு வரிக் கடன்கள் போன்றவை அத்துறையினரைப் பெரிதும் பாதித்துள்ளன. அந்நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மூலதனத்தைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கடன் உதவி கிடைப்பதில் சிக்கல்
பண மதிப்பு நீக்கத்திற்கு முன்பாகவே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடனுதவிகள் குறைந்து வந்த நிலையில், பண மதிப்பு நீக்கம் கடனுதவிகளை இல்லாமல் செய்தது. ஜிஎஸ்டி அமலான பிறகு அது இன்னும் மோசமாகி, தொழில் நடத்தவே முடியாத சூழலுக்கு பலரைத் தள்ளியது.ஜிஎஸ்டியின் பயன்களில் ஒன்றாகக் கூறப்பட்ட சிறு நிறுவனங்களுக்கான கடனுதவி அம்சங்கள் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான கடனுதவி 8.5 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது 2015ஆம் ஆண்டின் அளவை விட மிகவும் குறைவாகும்.

ரொக்க பணப் பரிவர்த்தனை
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில், நகை - ரத்தினங்கள், ஜவுளி, தோல், கைவினைப் பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதிப் பிரிவில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இத்துறை ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளையே பெருமளவில் சார்ந்திருக்கின்றன. ஆனால், ஜிஎஸ்டி வரி விதிப்பு இத்துறையை மோசமாக பாதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications