பஞ்சாப்: ஆளுநரிடம் ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறார் பகவந்த் மான்- இன்று கெஜ்ரிவாலுடன் ஆலோசனை
சண்டிகர்/டெல்லி: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில் நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான். முன்னதாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பகவந்த் மான் ஆலோசனை நடத்துகிறார்.
117 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. மொத்தம் 42.01% வாக்குகளையும் அறுவடை செய்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.

இதனையடுத்து பஞ்சாப்பில் முதல் முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது. இந்தியாவில் டெல்லியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் 2-வது மாநிலம் பஞ்சாப்.
பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் முன்னிறுத்தப்பட்டிருந்தார். டெல்லியில் நடைபெறும் ஆட்சி மாடலை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சி பிரசாரம் செய்தது. இதற்கு பஞ்சாப் வாக்காளர்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தாம் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கமாட்டேன். விடுதலைப் போராட்டத்தில் தூக்கு மேடையை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த கிராமத்தில்தான் பதவி ஏற்பேன் என அறிவித்திருந்தார் பகவந்த் மான். மேலும் பஞ்சாப் அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் இடம்பெறாது; பகத்சிங் மற்றும் அம்பேத்கர் படங்களே இடம்பெறும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் சண்டிகரில் இருந்து இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார் பகவந்த் மான். டெல்லியில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் பகவந்த் மான். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மான், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறோம். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நடைபெறாது. பகத்சிங் பிறந்த கிராமத்தில்தான் பதவியேற்பு நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications