விளைநிலம் போய்விடுமோ என அச்சம்.. 117வது நாளாக பரந்தூர் ஏர்போர்டை எதிர்த்து போராட்டம்
சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் 117 வது நாளை எட்டி இருக்கிறது.
சென்னை மீனம்பாக்கத்தில் இயக்கி வரும் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை முயற்சிகள் மேற்கொண்டது.
இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான இடவசதிகள் இல்லாத காரணத்தால் 2 வதாக புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை மீனம்பாக்கத்தில் இயக்கி வரும் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை முயற்சிகள் மேற்கொண்டது.

2 வது விமான நிலையம்
புதிய விமான நிலையத்துக்காக தமிழ்நாடு அரசிடம் விமான போக்குவரத்துத் துறை இடங்களை பரிந்துரை செய்ய கோரியது. அதன் அடிப்படையில், சென்னையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் தொடங்க செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தது தமிழ்நாடு அரசு.

4,500 ஏக்கர்
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க இறுதி முடிவு செய்யப்பட்டது. 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர். ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் விவசாய நிலங்கள், நீர் நிலைகள், வீடுகள் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் வீடுகள், விளை நிலங்களை கையகப்படுத்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலையம் அமைக்க தங்கள் பகுதியை விட்டுவிட்டு வேறு பகுதிகளை அரசு தேர்ந்தெடுத்துக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
புதிய விமான நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்வாய், ஏகனாபுரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு பரந்தூர் விமான நிலைய பணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

117 வது நாள்
கடந்த ஆகஸ்டு மாதம் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டியும், கருப்பு கொடியை ஏந்தியும் கிராமத்திலிருந்து ஊர்வலமாக நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி பல வகைகளில் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இவர்களின் 117 வது நாளை எட்டி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications