Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளைநிலம் போய்விடுமோ என அச்சம்.. 117வது நாளாக பரந்தூர் ஏர்போர்டை எதிர்த்து போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் 117 வது நாளை எட்டி இருக்கிறது.

சென்னை மீனம்பாக்கத்தில் இயக்கி வரும் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை முயற்சிகள் மேற்கொண்டது.

இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான இடவசதிகள் இல்லாத காரணத்தால் 2 வதாக புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னை மீனம்பாக்கத்தில் இயக்கி வரும் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை முயற்சிகள் மேற்கொண்டது.

2 வது விமான நிலையம்

2 வது விமான நிலையம்

புதிய விமான நிலையத்துக்காக தமிழ்நாடு அரசிடம் விமான போக்குவரத்துத் துறை இடங்களை பரிந்துரை செய்ய கோரியது. அதன் அடிப்படையில், சென்னையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் தொடங்க செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தது தமிழ்நாடு அரசு.

4,500 ஏக்கர்

4,500 ஏக்கர்

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க இறுதி முடிவு செய்யப்பட்டது. 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர். ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் விவசாய நிலங்கள், நீர் நிலைகள், வீடுகள் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இந்த நிலையில் வீடுகள், விளை நிலங்களை கையகப்படுத்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலையம் அமைக்க தங்கள் பகுதியை விட்டுவிட்டு வேறு பகுதிகளை அரசு தேர்ந்தெடுத்துக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

புதிய விமான நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்வாய், ஏகனாபுரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு பரந்தூர் விமான நிலைய பணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

117 வது நாள்

117 வது நாள்

கடந்த ஆகஸ்டு மாதம் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டியும், கருப்பு கொடியை ஏந்தியும் கிராமத்திலிருந்து ஊர்வலமாக நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி பல வகைகளில் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இவர்களின் 117 வது நாளை எட்டி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+