தமிழகத்தில் மொத்த மக்கள்தொகையில் 5.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ்!
சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 5.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸும், 0.9 சதவீதம் பேருக்கு 2ஆவது டோஸும் போடப்பட்டதாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. முதலில் 45 வயதினருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது. பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் எத்தனை சதவீதம் பேருக்கு முதல் டோஸ், இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

அதாவது 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழக மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மே 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் மொத்தமுள்ள மக்கள்தொகையில் 5.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸும், 0.9 சதவீதம் பேருக்கு 2ஆவது டோஸும் போடப்பட்டது.
செனஅனையில் உள்ள மக்கள்தொகையில் 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸும், 3.3 சதவீதம் பேருக்கு 2ஆவது டோஸும் போடப்பட்டுள்ளது. அடுத்தது நீலகிரியில் 12.3 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டாகிவிட்டது.
கோவையில் 7.9 சதவீதமும் வேலூரில் 7.2 சதவீதம் பேரும் தடுப்பூசியை போட்டுள்ளனர். தமிழகத்திலேயே ராமநாதபுரம் , திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 1.5 சதவீதம் பேருக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 47,05,473 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://tn.gov.in/district_view என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications