தமிழகத்தில் 3ம் வகுப்பு மாணவர்களில் பாதிப் பேருக்கு தமிழில் படிக்க தெரியவில்லை.. ஆய்வில் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் பாதிப் பேருக்கு தமிழில் படிக்கத் தெரியவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வுகளை தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி மன்றம் மேற்கொண்டது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தி, சமஸ்கிருதம் மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இவை மூன்றாவது மொழி குறித்த சாய்ஸில் வரும்.
அது போல் வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்ச், ஜெர்மனி, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளும் சில பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தை எப்படி படித்துவிடலாம். ஹிந்தியை கூட பிரைவேட்டாக படித்துவிடலாம். ஆனால் தமிழை பள்ளிகளில் படித்தால் மட்டுமே முடியும். அதுதான் சரியாக இருக்கும்.

முன்னுரிமை
ஆனால் பெரும்பாலானோர் தமிழுக்கு முன்னுரிமை அளித்து குழந்தைகள் அந்த தமிழை எத்தனை முறை தவறாக எழுதினாலும் படிக்க படிக்கத்தான் வரும் என தாய்மொழியை கற்றுக் கொடுக்கிறார்கள். தமிழ் எனக்கு தெரியாது என பெருமையாக சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமையும் இல்லை. யாரோ ஒரு வெள்ளைக்காரனின் மொழியை நுனி நாக்கில் சரளமாக பேசும் போது தாயை போன்ற தாய் மொழியை கற்றுக் கொள்வதில் ஒரு அசிங்கமும் இல்லை என்பதை பலர் உணர்ந்து வருகிறார்கள்.

தமிழ்மொழி
அந்த வகையில் தமிழ் மொழியை படிக்கும் மாணவர்களில் எத்தனை விழுக்காடு மாணவர்கள் சரியாக படிக்கிறார்கள் என்பது குறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி மன்றம் ஆய்வு மேற்கொண்டது. அதில் தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் பாதிப் பேருக்கு தமிழில் சரியாகப் படிக்கத் தெரியவில்லை.

20 விழுக்காடு மாணவர்கள்
20 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ் உரையைப் புரிந்து கொள்கிறார்கள். அதே போல் 47 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே 80 சதவீத ஆங்கில வார்த்தைகளை சரளமாக படிக்க முடிந்தது. தமிழகத்தில் 23 சதவீதம் மாணவர்கள் மட்டுமே எண்களைக் கண்டறிதல், பெருக்கல், வகுத்தல், எண்கள், வடிவங்களை கொண்ட அடிப்படைகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

பாதி பேருக்கு தமிழ் தெரியவில்லை
மூன்றாம் வகுப்பு மாணவர்களில் பாதிப் பேருக்கு தமிழில் படிக்கத் தெரியவில்லை என்ற ஆய்வு முடிவுகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழியை ஊக்குவிக்க அரசு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டினருக்கு,தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை, தமிழ் வழி கல்வியில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுத் தொகை உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. எனவே அரசு நலத்திட்டங்களையும் சலுகைகளையும் பெறுவது மட்டுமல்லாமல் தமிழை தாய்மொழியாக கொண்டிருக்கும் நாம் தமிழை தவறாக படிப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications