சென்னை மெரினா சாலையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர்.. வீர தீர விருதுகளை வழங்கிய முதல்வர்
சென்னை: 72வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் தேசியக்கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதையடுத்து அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
Recommended Video
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தேசியக் கொடியேற்றியதும், ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தேசியக் கொடிக்கு சல்யூட் மூலம், வணங்கி மரியாதை செலுத்தினர். தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
முன்னதாக, ராஜாஜி சாலையில் உள்ள போா் நினைவுச் சின்னத்துக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட்டது. முதல் முறையாக இந்த விருதானது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் வீரதீர செயல்களை புரிந்த 3 பேருக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார் . கால்நடை மருத்துவர் பிரகாஷூக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. தருமபுரியில் கிணற்றில் விழுந்த யானையை மீட்டு சிறப்பான சிகிச்சை அளித்த பிரகாஷூக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டது. ரயில் விபத்தை தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சுரேஷூக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது கோவை அப்துல் ஐபாருக்கு முதல்வர் வழங்கினார்.
மத நால்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது கோவை அப்துல் ஐபாருக்கு முதல்வர் வழங்கினார்.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சாா்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முப்படையின் வீரத்தை பறைசாற்றும் அணிவகுப்புகள், அரசுத் துறைகளின் சாா்பில் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்புகள் போன்றவையும் விழாவில் இடம்பெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று ஆளுநா் மாளிகையில் நடத்தப்படும் தேநீா் விருந்து இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.