தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா.. முதல் இரு இடங்களில் சென்னை, கோவை மாவட்டங்கள்
சென்னை: தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,23,985 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 210 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 12 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12.200 ஆக உயர்ந்துள்ளது. 911 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,04,239 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் 7,547 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications