தாம்பரத்தில் சிமெண்ட் லாரி மோதி 25 வயது இளைஞர் தலை நசுங்கி பலி.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரத்தில் சிமெண்ட் லாரி மோதி 25 வயது இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்தார். தரமற்ற ஹெல்மட்டால், ஹெல்மட் அணிந்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

A 25-year-old youth was killed two-wheeler accident in Tambaram

திருவாரூரை சேர்ந்தவர் பிரேம் குமார் (25). இவர் சென்னையில் தங்கி இருந்து சேலையூரில் பஜாஜ் நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருட்கள் சர்வீஸ் மையத்தில்

வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று தான் வேலைக்கு சென்னை வந்துள்ளார்.

வேலை சம்பந்தமாக தாம்பரத்தில் கிறிஸ்த்துவ கல்லூரி அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி

வந்த லாரி மோதியதில் தடுமாறி கீழே விழுந்தவரின் தலை மீது பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனை கண்ட அங்கிருந்த போக்குவரத்து போலிசார் உடனடியாக லாரியை மடக்கி பிடித்து ஊத்துகாடு பகுதியை சேர்ந்த ஓட்டுனர் நரேந்திரனை பிடித்து

குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தரமற்ற ஹெல்மட் அணிந்தது காரணமாக ஹெல்ம்ட் அணிந்திருந்தும் தலை நசுங்கி உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+