106 பேரிடம் ரூ.6 கோடி மோசடி செய்து விட்டதாக.. முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் மீது போலீசில் புகார்!
சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6 கோடி மோசடி செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபீல். இவர் வாணியம்பாடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

கடந்த தேர்தலில் நிலோபர் கபீலுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிமுக மூத்த அமைச்சர்களை வசைபாடி இருந்தார். இந்த நிலையில் நிலோபர் கபீல் ரூ.6 கோடி மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வை சேர்ந்தவரும், நிலோபர் கபீல் உதவியாளராக இருந்தவருமான பிரகாசம் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ' முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அரசு வேலை வாங்கி தருவதாக 105 பேரிடம் ரூ.6 கோடி வாங்கி மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடி பணத்தில் தனது மூத்த மகள் பெயரில் சொத்து வாங்கியுள்ளார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரகாசம்.கூறியுள்ளார்.
இதற்கிடையே இன்று மாலை நிலோபர் கஃபீலை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் நிலோபர் கஃபீல் நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications