Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பரங்கிமலை ஜிஎஸ்டி சாலையில் பல கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு.. கட்டிடங்கள் இடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பரங்கிமலை ஜிஎஸ்டி சாலையில் அரசு நிலத்தில் கட்டிய புதிய கட்டிடம் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி கட்டிடம் கட்டியதால் ஜேசிபி இயந்திரத்துடன் சென்று இடித்து அகற்றி அதை கையகப்படுத்தினார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக சிக்கல் வரும் என்பதற்கு பரங்கிமலை சம்பவம் உதாரணம். குத்தகைக்கு வாங்கிய இடத்தை குத்தகை காலம் முடிந்ததும் புதிய கட்டிடம் கட்டியதை புகாரின் அடிப்படையில் கண்டுபிடித்த அதிகாரிகள், அதனை இடித்து அகற்றி உள்ளனர். எனவே அரசு நிலத்தை யாராவது ஆக்கிரமித்து வசித்து வருகிறார்கள் என்றால்,அந்த நிலத்தை மறந்தும் வாங்கிடாதீர்கள்.

Chennai land Parangimalai

சரி விஷயத்திற்கு வருவோம். சென்னை பரங்கிமலை ஜி எஸ் டி சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை காலம் முடிந்தும் அந்த இடத்தில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளி, கடைகள் செயல்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் பல்லாவரம் தாசில்தார் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் வணிக வளாக நிலத்தை கையகப்படுத்தி உள்ளார்கள்.

இதனிடையே அரசு நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் முயன்றபோது, உடனடியாக அந்த கல்லூரி நிர்வாகம் நீதிமன்றம் சென்றதால் தற்காலிகமாக பள்ளி மற்றும் கல்லூரி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு கையகப்படுத்திய இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது.

Chennai land Parangimalai

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்து அரசு இடத்தில் செயல்பட்ட இனிப்பு கடை மற்றும் கல்லூரி சார்பில் விரிவுப்படுத்தி புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தை அதிரடியாக இடித்து அகற்றினர். பின்னர் அந்த இடத்துக்கு 'சீல்' வைத்தனர். மேலும் இது தொடர்பாக பரங்கிமலை போலீசில் வருவாய் துறை சார்பில் புகார் அளிக்கப்படுள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில், பரங்கிமலை கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அதை வைத்து தனியார் வங்கியில் 34 கோடி கடன் வாங்கி அங்கே கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக அறப்போர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு இன்று அந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுள்ளது.

இந்த அரசு நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த அரசு ஊழியர்கள் யார்? இந்த அரசு நிலத்தை வைத்து கடன் வாங்கி கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்ட ஆக்கிரமிப்பாளர்கள் யார்? இவர்களுக்கு என்ன தண்டனை? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+