ஆடி 18க்கு ஊருக்கு போறீங்களா? எழும்பூர்- நாகர்கோவில் சிறப்பு ரயில்.. தென்னக மக்களுக்கு குட் நியூஸ்!
சென்னை: ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இருந்து சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை சிறப்பு சூப்பர் ஃபார்ஸ்ட் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆடி பெருக்கு பண்டிகையை முன்னிட்டு இன்று இரவு (வெள்ளிக்கிழமை) ஏசி கோச் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயில் நாளை நாகர்கோவிலை சென்றடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.

சராசரியாக ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கட்டணம் பாதுகாப்பான பயணம் என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய ரயில்வே பயணிகளின் வரப் பிரசாதமாக திகழ்கிறது.
இதனால் தற்போது ஆடி பெருக்கு காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது தென்னக ரயில்வே. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்னக ரயில்வே சார்பில் இப்போது சென்னையில் இருந்து தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஆடிப்பெருக்கு காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து இன்று ஒரு வழிப் பாதையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது.

இப்படி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோயில் வரை வண்டி எண் 06005 என்ற எண் கொண்ட ஒரு வழி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து 10.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் நாளை அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு நாகர்கோயிலை சென்றடையும். இந்த ரயிலில் மூன்று இரண்டடுக்கு ஏசி டயர் பெட்டிகள், 11 ஸ்லிப்பர் பெட்டிகள், 3 பொது வகுப்பு பெட்டிகள், மற்றும் இரண்டு லக்கேஜ் கம் ப்ரேக் வேன் பெட்டிகள் இருக்கும்.
தொடர்ந்து எழும்பூரை தொடர்ந்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை , விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ஊர்களில் நிற்கும் இந்த ரயில் 11 மணிக்கு நாகர்கோயிலை சென்றடையும். ஆனால் மறுபடியும் சென்னைக்கு இந்த ரயில் இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications