Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி 18க்கு ஊருக்கு போறீங்களா? எழும்பூர்- நாகர்கோவில் சிறப்பு ரயில்.. தென்னக மக்களுக்கு குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இருந்து சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை சிறப்பு சூப்பர் ஃபார்ஸ்ட் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆடி பெருக்கு பண்டிகையை முன்னிட்டு இன்று இரவு (வெள்ளிக்கிழமை) ஏசி கோச் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயில் நாளை நாகர்கோவிலை சென்றடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.

Indian Railways Train Chennai

சராசரியாக ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கட்டணம் பாதுகாப்பான பயணம் என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய ரயில்வே பயணிகளின் வரப் பிரசாதமாக திகழ்கிறது.

இதனால் தற்போது ஆடி பெருக்கு காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது தென்னக ரயில்வே. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்னக ரயில்வே சார்பில் இப்போது சென்னையில் இருந்து தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஆடிப்பெருக்கு காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து இன்று ஒரு வழிப் பாதையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது.

Indian Railways Train Chennai

இப்படி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோயில் வரை வண்டி எண் 06005 என்ற எண் கொண்ட ஒரு வழி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து 10.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் நாளை அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு நாகர்கோயிலை சென்றடையும். இந்த ரயிலில் மூன்று இரண்டடுக்கு ஏசி டயர் பெட்டிகள், 11 ஸ்லிப்பர் பெட்டிகள், 3 பொது வகுப்பு பெட்டிகள், மற்றும் இரண்டு லக்கேஜ் கம் ப்ரேக் வேன் பெட்டிகள் இருக்கும்.

தொடர்ந்து எழும்பூரை தொடர்ந்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை , விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ஊர்களில் நிற்கும் இந்த ரயில் 11 மணிக்கு நாகர்கோயிலை சென்றடையும். ஆனால் மறுபடியும் சென்னைக்கு இந்த ரயில் இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+