சென்னை மயிலாப்பூரில் குடிக்க தண்ணீர் கேட்பது போல் வீடுபுகுந்து திருடிய இளம் பெண்.. தர்ம அடி
சென்னை: சென்னை மயிலாப்பூரில் குடிக்க தண்ணீர் கேட்பது போல் வீடுபுகுந்து பீரோவில் இருந்து நகை திருடிய இளம் பெண்ணை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை மயிலாப்பூர் வி.சி.கார்டன் பகுதியில் வசிப்பவர் அன்பழகன். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் நேற்று மாலை அன்பழகனின் மனைவி மட்டும் தனியாக இருந்திருக்கிறார்.

அப்போது, அங்கு வந்த ஒரு இளம்பெண், ''தாகமாக இருக்கிறது. குடிக்க தண்ணீர் வேண்டும்,'' என்று கேட்டிருக்கிறார். அப்போது அன்பழகன் மனைவி தண்ணீர் எடுத்து வர சமையலறைக்கு சென்றிருக்கிறார். படுக்கை அறைக்குள் நுழைந்த இளம்பெண் பீரோவை திறந்து, அதிலிருந்த நகைகளை எடுத்து கொண்டு தப்ப முயன்றுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அத்துடன், அந்த இளம் பெண்ணை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து இளம்பெண்ணை மீட்டார்கள்.. விசாரணையில், யானைகவுனி பகுதியை சேர்ந்த லட்சுமி (33) என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் லட்சுமியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications