நடிகர்கள் அறிஞர் இல்ல.. சோறு போடுங்க.. தலையில் வெச்சு கொண்டாடாதீங்க -சிந்திக்க வைத்த சத்யராஜ் பேச்சு
சென்னை: நடிகர்களுக்கு ரசிகர்கள் சோறு போட வேண்டும் என்றும், அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம் எனவும், ஒரு நடிகருக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க வேண்டாம் என்றும் நடிகர் சத்யராஜ் தெரிவித்து உள்ளார். நடிகர்கள் யாரும் பெரியாரோ, மார்க்சோ, அம்பேத்கரோ அல்ல என்று அவர் விளக்கமளித்து இருக்கிறார்.
விஜய் மற்றும் அஜித் ஆகியோர் நடித்த வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி ஒன்றாக வெளியாகி உள்ளன.
கடந்த சில வாரங்களாகவே இந்த திரைப்படங்கள் தொடர்பான பேச்சுக்களும், ரசிகர்களுக்கு இடையிலான வாக்குவாதங்களும் பேஸ்புக், ட்விட்டரை, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

எல்லை மீறும் ரசிகர்கள்
தங்களுக்கு பிடித்த நடிகர்களையும் அவர்களின் திரைப்படங்ளையும் கொண்டாடி போஸ்டர், பேனர், கட் அவுட் வைத்து ரசிகர்கள் வரவேற்றனர். முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டபோது ரசிகர்கள் கொண்டாட்டம் எல்லை மீறியதால் சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். அஜித் ரசிகர்கள் விஜய்யையும், விஜய் ரசிகர்கள் அஜித்தையும் கீழ் தரமாக விமர்சித்து வருவது பலரை முகம் சுளிக்க வைத்து இருக்கிறது.

அஜித் ரசிகர் மரணம்
குறிப்பாக சென்னையில் கோயம்பேடு ரோகினி திரையரங்கம் அருகே 18 வயது அஜித் ரசிகர் ஒருவர் லாரியின் மீது ஏறி நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ரசிகர்களின் தீவிர மனப்பான்மையை பலரும் விமர்சித்து இளைய தலைமுறையின் மீதான தங்களின் வேதனையைப் அவர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

நடிகர் சத்யராஜ் பேட்டி
இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் கடந்த 2022 ஆம் ஆண்டு பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் பேசுகையில், "நீங்கள் ஒரு நடிகருக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதீர்கள். நடிக்கத்தான் தெரியும். சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய தவறு, நடிகர்களை நீங்கள் ஐன்ஸ்டீன் அளவுக்கு நினைப்பதுதான். இல்லை.

தலையில் வைத்து கொண்டாடாதீர்கள்
எங்களுக்கு அதிகம் தெரியாது. ஆசிரியர், மனநல மருத்துவர், சமூக ஆர்வலருக்கு எங்களை விட அதிகம் தெரியும். நீங்கள் என்னிடமே கேள்வி கேட்கிறீர்கள். நான் ஒரு சாதாரண நடிகன். தற்கொலைக்கான காரணத்தை மருத்துவர் சொல்வார். ஏன் எங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்? நாங்கள் சும்மா நடிப்போம். ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்ஷன்.. என்று சொன்னால் டான்ஸ் ஆடுவோம்.

நாங்கள் தலைவர்கள் அல்ல
சண்டை போடுவோம். ஊடகங்கள் மீது இருக்கும் பெரிய வருத்தம் என்னவென்றால், எங்களுக்கு சோறு போடுங்கள். தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். தயவு செய்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். நாங்கள் யாரும் பெரியாரோ, மார்க்சோ, அம்பேத்கரோ மாபெரும் அறிஞரோ அல்ல. மனநலம் பற்றி ஒரு நடிகரிடம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அப்படியென்றால் மனநல நிபுணரிடம் பரதநாட்டியம் குறித்து பேசுவீர்களா? என்னிடம் வாயை பிடுங்க முடியாது." என்றார்.
-
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு












Click it and Unblock the Notifications