கொந்தளித்த தமிழர்கள்.. “பேக்” அடித்த பிரசார் பாரதி! காரைக்கால் வானொலியில் இந்தி நிகழ்ச்சிகள் ரத்து
சென்னை: காரைக்கால் வானொலி நிலைய எஃப்.எம்-இல் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டு இந்தி நிகழ்ச்சிகளின் நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் நாடு முழுவதும் ஆல் இந்தியா ரேடியோ வானொலி சேவையை வழங்கி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் இந்த வானொலி சேவைகள் அந்தந்த மாநில மொழிகளில் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சென்னை, தருமபுரி, நாகர்கோவில், காரைக்கால் ஆகிய இடங்களில் வானொலி சேவை செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் பல்வேறு மாநில வானொலிகளில் இந்தி திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

காரைக்கால் FM
இந்த நிலையில் காரைக்கால் வானொலி நிலையத்தின் எஃப்.எம்.-இல் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. காரைக்கால் வானொலியில் தினமும் காலை 5.-52 முதல் இரவு 11.20 மணி வரை 17.28 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்தன.

இந்தி திணிப்பு
இந்த நிலையில் முன்னறிவிப்பின்றி, நேற்று முதல் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டது. காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையிலும், இரவில் 9 மணி முதல் 10 மணி வரையிலும் மும்பை விவிதபாரதி நிலையத்தின் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

4 மணி நேரம் இந்தி
இதன் மூலம் காரைக்கால் வானொலியில் தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பப்பட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பை கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வானொலி நிலைய அதிகாரிகள் விளக்கமளித்தனர். ஆனால் மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் வலுத்தன.

பின்வாங்கிய பிரசார் பாரதி
காரைக்கால் வானொலில் இந்தி நிகழ்ச்சியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் எச்சரித்தார். இந்த நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக காரைக்கால் வானொலி பண்பலை சேவையில் 4 மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்தி நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக பிரசார் பாரதி அறிவித்து உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications